December 6, 2025, 7:28 AM
23.8 C
Chennai

பெண் ஆய்வாளர் இயக்கிய ரோந்து வாகனம்! கட்டுப்பாட்டை இழந்து விபத்து!

amma Patrol vehicle - 2025

பணி நேரத்தில் பெண் ஆய்வாளர் இயக்கிய ரோந்து வாகன கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ரோந்து வாகனமும் கடுமையாக சேதமடைந்துள்ளது. இச்சம்பவத்தால் கீழ்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை நியூ ஆவடி ரோடு அருகே அமைந்துள்ள கீழ்ப்பாக்கம் தோட்டம் காலனி அருகே ரோந்து பணியை முடித்துவிட்டு காவல் ஆய்வாளர் அம்பிகா காவல் நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் நின்றிருந்த வாகனங்கள் மீது அதிவேகமாக மோதியது. அப்போது அதில் இருந்த இருவர் பலத்த காயங்களுடன் படுகாயமடைந்தனர். ரோந்து வாகனம் மோதியதில் இரண்டு வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து ஆவடி செல்வதற்கு பிரதானமாக சாலையாக உள்ளது நியூ ஆவடி சாலை, இந்தச் சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த அம்மா ரோந்து வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியது. அதில் இருவர் படுகாயமடைந்தார்.மேலும் சாலையில் நின்றிருந்த இரு வாகனங்கள் சேதம் அடைந்தது.

சம்பவம் குறித்து விசாரித்ததில், ரோந்து வாகனத்தை இயக்க உரிய ஓட்டுனர் இல்லாததால், அதை பெண் காவல் ஆய்வாளர் அம்பிகாவே இயக்கியது தெரியவந்தது. அதுவே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

நியூ ஆவடி ரோடு வழியாக காவல் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது அப்போது ஆய்வாளர் வாகனத்தை வலதுபுறம் திருப்ப முயன்றுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையில் நின்றிருந்த வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. தன்னால் எந்த விபத்தும் ஏற்பட்டு விடக்கூடாது என பயந்து ஆய்வாளர் வாகனத்தை முழுமையாக திருப்ப முற்பட்டதால் சாலையோரம் நின்றிருந்த ஆட்டோவில் வாகனம் மோதியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் அப்பகுதியை சேர்ந்த இருவர் தலையில் பலத்தகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர. இந்நிலையில் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories