ரூ1.45 லட்சம் லஞ்ச வழக்கில் ஆம்பூர் டிஎஸ்பி, எஸ்.ஐ. கைது: பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Published:

ambur police - 2026வேலூர்:

மணல் கடத்தல் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர்களை விடுவிக்க ரூ.1.45 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில் ஆம்பூர் டி.எஸ்.பி., தனராஜன், எஸ்.ஐ., லூர்து ஜெயராஜ் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

ஆம்பூர் டி.எஸ்.பி., அலுவலகத்தில் வைத்து இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

ambur police bribe2 - 2026

இதனிடையே 1.45 லட்சம் லஞ்சம் வாங்கியதாக ஆம்பூர் டிஎஸ்பி மற்றும் எஸ்ஐ கைது செய்யப் பட்டதற்கு, பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்!

மணல் விற்பனை செய்வதற்கு லாரி உரிமையாளரிடம் லாரி ஒன்றிற்கு 20 ஆயிரம் வீதம் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பி தன்ராஜ் மற்றும் அவருக்கு ப்ரோக்கராக இருந்த எஸ்ஐ ஜெயராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img