பாடம் நடத்தாத ஆசிரியரை மாற்றக் கோரி பள்ளி முற்றுகை

Published:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி பஞ்சாயத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி  உள்ளது. இங்கு 34 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் காளிராஜ் என்ற ஆசிரியர் கடந்த 6 மாதத்திற்கு முன் இப்பள்ளிக்கு மாறுதலாகி வந்தார். அவர் வந்த பிறகு மாணவர்களுக்கு சரியாக பாடம் நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் பள்ளி தலைமையாசிரியர் கோவில்பட்டி உதவி தொடக்க கல்வி அதிகாரியிடம் புகார் மனு அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் பள்ளிக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related articles

Recent articles

spot_img