ஒருதலைக் காதலில் 9ஆம் வகுப்பு சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர் கைது

மதுரை:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஒருதலைக் காதலில் 9ஆம் வகுப்பு பயிலும் சிறுமியின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள நடுவக்கோட்டையை சேர்ந்தவர் மணிப்பாண்டி. இவரது மகள் சித்ரா. 14 வயதாகும் இவர் அங்குள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்குச் செல்ல சித்ரா ஷேர் ஆட்டோவுக்காகக் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஓர் இளைஞர் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

தீயில் கருகிய சிறுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, சம்பவம் குறித்து அறிந்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் ஒருதலைக் காதலால் இந்தச் சம்பவம் நடந்திருப்பதாக போலீஸாருக்கு தெரியவந்தது. இதை அடுத்து, மாணவியின் ஊரான நடுவக்கோட்டையைச் சேர்ந்த சந்தானம் என்பவரின் மகன் பாலமுருகன் (வயது 26) தான் சித்ரா மீது தீ வைத்தார் என்பது தெரியவந்தது. கடந்த சில மாதங்களாக மாணவியின் மீது ஒருதலைக் காதலை வளர்த்து வந்துள்ளார், தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த பாலமுருகன். இவர் சித்ராவிடம் காதலைச் சொன்னபோது மறுத்த அவர், தன் பெற்றோரிடம் இது குறித்து புகார் தெரிவித்தார். அவர்கள் பாலமுருகனை கண்டித்தும், அவர் தன் போக்கில் மாறவில்லை.

சித்ராவைப் பின்தொடர்ந்து தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தி, கொலை மிரட்டல், தற்கொலை மிரட்டல் என பல வழிகளைக் கையாண்டுள்ளார் ஆனால், சித்ரா இது குறித்து அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி பாலமுருகனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ALSO READ:  பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

இந்நிலையில் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்த பாலமுருகன், தனது கைதுக்கு பழிவாங்க, சித்ரா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடியுள்ளார். தப்பியோடிய பாலமுருகனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டது. போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில், புதுப்பட்டி ஆயிரம் கண்ணுடையார் கோவில் அச்சம்பட்டி அருகில் உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த பாலமுருகன் இன்று காலை போலீஸில் சிக்கிக் கொண்டார்.

கடந்த 2014லும் இதே போன்று, ஒருதலைக் காதல் விவகாரத்தில் திருமங்கலம் அருகே சின்னபூலாம்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் மீனா, அங்காள ஈஸ்வரி மீது ஆசிட் வீசப்பட்டது. திருமங்கலம் பகுதியில் இது போன்ற சம்பவங்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories