December 6, 2025, 8:52 AM
23.8 C
Chennai

சிலை பாதுகாப்புக்கு அறநிலையத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்

சென்னை:
ஆலயங்களின் தொன்மையான சிலைகள் பாதுகாப்புக்கு அறநிலையத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சிலைகள் பலவும் அழியும் நிலையில் இருப்பதாக ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் குற்றம் சாட்டியுள்ளார். உயர் நீதிமன்றத்தில் அவர் தெரிவித்த கருத்தால், நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் சிலைக் கடத்தல் சிறப்பு பிரிவை அமைத்து, சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் பணித்தது. உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன், சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக 21 வழிமுறைகளை வழங்கி யிருந்தார்.

இந்த வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதி மகாதேவன் முன்பு மீண்டும் வந்தது. மேலும், இந்து சமய அறநிலைய துறை சார்பில் தெரிவிக்கப் பட்ட விளக்கத்தில், உயர் நீதிமன்றம் அளித்த 21 வழிமுறைகளில், 5 வழிமுறைகளை நிறைவேற்றித் தர அறநிலையத்துறை தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சிலைகளைப் பாதுகாக்க அறநிலையத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. இதனால் பல சிலைகள் அழியும் நிலையில் இருப்பதாக ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஐ.ஜி.யின் கருத்தின்போது குறுக்கிட்ட நீதிபதி மகாதேவன், 50 ஆண்டுகள் பழமையான சிலைகளை இருட்டு அறையில் வைப்பதற்கு இந்து சமய அறநிலையத் துறை எதற்கு என்று கேள்வி எழுப்பினார். மேலும் தான் நேரில் சென்று பார்த்த 1,700 கோவில்களிலும் இதே நிலைதான் இருப்பதாக நீதிபதி மகாதேவன் வேதனை தெரிவித்தார்.

பின்னர், உயர் நீதிமன்றம் பிறப்பித்த 21 வழிமுறைகளையும் நிறைவேற்றுவது குறித்து, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், ஐஜி பொன் மாணிக்கவேல், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆகியோர் கலந்தாலோசித்து 23 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி மகாதேவன், இந்த வழக்கை ஒத்திவைத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories