போட்டிக் கூட்டங்களால் களை கட்டும் காவிரி விவகாரம்!

சென்னை:

காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை அளித்தது. அத்துடன் இந்தத் தீர்ப்பு இன்னும் 15 வருடங்களுக்கு அமலில் இருக்கும். இதை எதிர்த்து அப்பீல் செய்ய முடியாது என்று கூறி விட்டது. இருப்பினும் தமிழக அரசு, தமிழகத்துக்குப் பாதகமாக தீர்ப்பு வந்துள்ளதால் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று பல தரப்பினரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான திமுக., காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அடுத்து என்ன விதமான நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசிப்பதாகக் கூறியது. இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு, அதிமுக, பாஜக., உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் அழைத்திருப்பதாகக் கூறினார் திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். அதுமட்டுமல்ல, நேற்று கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து கருணாநிதியைச் சந்தித்த, இன்னும் கட்சியே துவங்காத கமல்ஹாசனைக் கூட இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதை அடுத்து, இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதன் முடிவில் காவிரி விவகாரம் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் பிப்.,23ல் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப் பட்டது.

இதனிடையே, ஆளும் கட்சியான அதிமுக,.வையும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைத்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பதால், இதை தன் மானப் பிரச்னையாக எடுத்துக் கொண்டு, ஆளும் கட்சி தரப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினால் என்ன என்று அதிமுக.,வுக்கு தோன்றியுள்ளது. ஆனால், அரசின் சார்பில் இதனை நடத்தலாம் என்று யோசித்து, வரும் 22ஆம் தேதியன்று முதல்வர் தலைமையில் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இன்று முற்பகல், காவிரி விவகாரம் தொடர்பாக, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்ட ஆலோசனையின் முடிவில், பிப்.22ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப் பட்டது. ஏற்கெனவே, பிப்.23ல்

தி.மு.க. சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் திடீர் ஆலோசனை நடத்தி, அதற்கு ஒரு நாள் முன்னதாக, தங்கள் தரப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories