போட்டிக் கூட்டங்களால் களை கட்டும் காவிரி விவகாரம்!

சென்னை:

காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை அளித்தது. அத்துடன் இந்தத் தீர்ப்பு இன்னும் 15 வருடங்களுக்கு அமலில் இருக்கும். இதை எதிர்த்து அப்பீல் செய்ய முடியாது என்று கூறி விட்டது. இருப்பினும் தமிழக அரசு, தமிழகத்துக்குப் பாதகமாக தீர்ப்பு வந்துள்ளதால் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று பல தரப்பினரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான திமுக., காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அடுத்து என்ன விதமான நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசிப்பதாகக் கூறியது. இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு, அதிமுக, பாஜக., உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் அழைத்திருப்பதாகக் கூறினார் திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். அதுமட்டுமல்ல, நேற்று கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து கருணாநிதியைச் சந்தித்த, இன்னும் கட்சியே துவங்காத கமல்ஹாசனைக் கூட இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதை அடுத்து, இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதன் முடிவில் காவிரி விவகாரம் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் பிப்.,23ல் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப் பட்டது.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

இதனிடையே, ஆளும் கட்சியான அதிமுக,.வையும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைத்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பதால், இதை தன் மானப் பிரச்னையாக எடுத்துக் கொண்டு, ஆளும் கட்சி தரப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினால் என்ன என்று அதிமுக.,வுக்கு தோன்றியுள்ளது. ஆனால், அரசின் சார்பில் இதனை நடத்தலாம் என்று யோசித்து, வரும் 22ஆம் தேதியன்று முதல்வர் தலைமையில் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இன்று முற்பகல், காவிரி விவகாரம் தொடர்பாக, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்ட ஆலோசனையின் முடிவில், பிப்.22ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப் பட்டது. ஏற்கெனவே, பிப்.23ல்

தி.மு.க. சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் திடீர் ஆலோசனை நடத்தி, அதற்கு ஒரு நாள் முன்னதாக, தங்கள் தரப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளார்.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories