தமிழக அரசு நிகழ்ச்சிகளில்தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும்!

Published:

சென்னை:
தமிழக அரசின் நிகழ்ச்சிகளில்தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று கூறியுள்ளார் சென்னை ஐஐடி இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி.

சென்னை ஐ.ஐ.டி.யில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்ட விழாவில் சமஸ்கிருதத்தில் அமைந்த துதிப் பாடல் பாடப்பட்டு, அதன் பின்னர் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல், சமஸ்கிருததத்தில் துதிப் பாடல் பாடப்பட்டதாக சர்ச்சையைக் கிளப்பினர் சிலர். மேலும், சமஸ்கிருத பாடல் பாடப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என மதிமுக., பொது செயலர் வைகோ., வலியுறுத்தினார்.

இருப்பினும் இந்தச் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ள ஐஐடி இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி, நிகழ்ச்சியில் பதிவு செய்யப் பட்ட பாடல் எதுவும் போடப் படவில்லை. தேசிய கீதத்தைக் கூட பதிவு செய்ததைப் போடாமல், பாடத்தான் செய்தோம். நிகழ்ச்சியின் துவக்கம் என்பதால் துதிப்பாடல் பாடப்பட்டது. எனவே இதை பெரிதுபடுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, மத்திய அரசின் கீழ் இயங்கும் சென்னை ஐ.ஐ.டி.யில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டிய அவசியமில்லை. தமிழக அரசின் நிகழ்ச்சிகளில்தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img