காஞ்சி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸித்தி அடைந்தார்

Published:

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை ஸித்தி அடைந்தார். அவருக்கு வயது 83.

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். மூச்சுத் திணறல் காரணமாக சங்கரமடம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை அவர் அனுமதிக்கப்பட்டார்.

jayendra saraswathi - 2026பல நாட்களாகவே அவருக்கு மூச்சுத் திணறல் இருந்துள்ளது. அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார்.இந்நிலையில் இன்று காலை அவருக்கு மூச்சுத் திணறல் அதிகரித்ததால் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தீடீரென இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.

83 வயதாகும் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி மகா பெரியவர் இருந்த போது இளைய பீடாதிபதியாக நியமிக்கப் பட்டவர். பின்னர் 1994 ம் ஆண்டு காஞ்சி சங்கரமடத்தின் 69வது பீடாதிபதியாக பொறுப்பேற்றார். சமூக நலப் பணிகளில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது காலத்தில் தான் காஞ்சி சங்கர மடத்தின் சார்பில், கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் தொண்டு நிறுவனங்கள் அதிகம் வளர்ந்தன. குடிசைப் பகுதிகளுக்கும் இந்து தர்மத்தின் சிறப்பைக் கொண்டு போய்ச் சேர்த்தவர்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img