January 20, 2025, 5:15 AM
23.9 C
Chennai

காஞ்சி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸித்தி அடைந்தார்

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை ஸித்தி அடைந்தார். அவருக்கு வயது 83.

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். மூச்சுத் திணறல் காரணமாக சங்கரமடம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை அவர் அனுமதிக்கப்பட்டார்.

பல நாட்களாகவே அவருக்கு மூச்சுத் திணறல் இருந்துள்ளது. அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார்.இந்நிலையில் இன்று காலை அவருக்கு மூச்சுத் திணறல் அதிகரித்ததால் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தீடீரென இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.

83 வயதாகும் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி மகா பெரியவர் இருந்த போது இளைய பீடாதிபதியாக நியமிக்கப் பட்டவர். பின்னர் 1994 ம் ஆண்டு காஞ்சி சங்கரமடத்தின் 69வது பீடாதிபதியாக பொறுப்பேற்றார். சமூக நலப் பணிகளில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது காலத்தில் தான் காஞ்சி சங்கர மடத்தின் சார்பில், கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் தொண்டு நிறுவனங்கள் அதிகம் வளர்ந்தன. குடிசைப் பகுதிகளுக்கும் இந்து தர்மத்தின் சிறப்பைக் கொண்டு போய்ச் சேர்த்தவர்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திருமுருகாற்றுப் படையில் திருப்பரங்குன்றம்!

முதலில் திருப்பரங்குன் றமாகிய படைவீட்டைப் பற்றிச் சொல்கிறார். முருகப்பெருமான் ஆறு படைவீடு களில் எழுந்தருளியிருக்கிறான் என்ற வழக்கு, பலகால மாகத் தமிழ் நாட்டில் இருக்கிறது.

ஐதராபாத் ரயிலை தென்காசி வழியாக இயக்கக் கோரிக்கை!

திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் பாதையில் மாற்றி இயக்கவும் திருவனந்தபுரம் வடக்கு-செங்கோட்டை-மதுரை-தாம்பரம்

முருக பக்தர்களை திமுக அமைச்சர் சேகர் பாபு அவமதித்த விவகாரம்; இந்து முன்னணி கண்டனம்!

திருச்செந்தூரில் முருக பக்தர்களை திமுக., அமைச்சர் சேகர்பாபு அவமதித்த விவகாரத்தில், இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது அந்த அமைப்பின்

பயணிகள் கவனத்துக்கு… நெல்லை சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்!

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில் சேவையில் மாற்றம்எழும்பூர்...