திண்டுக்கல் மாவட்டம் புகழ் பெற்ற பழனி மலை தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் செல்வதற்கு, வின்ச் சேவை பொது மக்களால் பரவலாக பயன்படுத்தப் படுகிறது.
இந்நிலையில் ஆண்டு பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோவிலில் முதலாவது இழுவை ரயில் (வின்ச்) மார்ச் 12ஆம் தேதி முதல் அடுத்து வரும் 45 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.