கறுப்புச் சட்டை; காவிரி முழக்கம்: வழக்கம்போல் ஸ்டாலின் தலைமையில் திமுக., வெளிநடப்பு!

tamil nadu secretariat tamil nadu assembly - 2026

தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதில் வழக்கம்போல் திமுக., வெளிநடப்பு செய்தது.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 10.30 மணிக்கு தொடங்கி, துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.

முன்னதாக, விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதாலும், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதாலும் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. பட்ஜெட் தாக்கல் முடிந்ததும், சபாநாயகர் தனபால் அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் பிற்பகலில் நடைபெறுகிறது. இதில் சட்டசபை கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அனைத்துக்கட்சி குழுவை சந்திக்க, இதுவரையில் பிரதமரை சந்திக்க வாய்ப்பு இல்லாமல் உள்ளது. இதுதொடர்பாக, இன்று மாலை சட்டப்பேரவையின் சிறப்பு அமர்வு நடைபெற வாய்ப்புள்ளதாகவும், இக்கூட்டத்தில் காவிரி தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இத்தகைய பின்னணியில், இன்று காலை தமிழக பட்ஜெட் கூட்டத் தொடருக்கு கருப்பு சட்டை அணிந்து திமுகவினர் வந்தனர். பட்ஜெட் கூட்டத்தொடருக்கு திமுகவினர் ஏன் கருப்பு சட்டையில் வந்துள்ளனர் என்று கேட்டபோது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசு தாமதம் செய்வதற்கு தாங்கள் கருப்பு சட்டையில்  வந்ததாக அவர்கள் கூறினர்.

இருப்பினும், வழக்கம்போல், கறுப்புச் சட்டை, காவிரி முழக்கம் என  பட்ஜெட் உரையை புறக்கணித்து திமுகவினர் வெளி நடப்பு செய்தனர். இது குறித்து தெரிவித்த திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அரசு முயற்சிக்கவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்வதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories