ஓட்டைப் பானையில் சமையல்: பட்ஜெட் குறித்து ‘வெளிநடப்பு ஸ்பெஷலிஸ்ட்’ ஸ்டாலின் !

m k stalin dmk - 2026

சென்னை: ஓட்டைப் பானையில் சமையல் செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள் என தமிழக அரசு பட்ஜெட் குறித்து எதிர்க் கட்சித் தலைவரும் திமுக., செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கருத்து கூறியுள்ளார்.

தமிழக நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை இன்று 2018-19 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து பேசினார். ஜெயலலிதா அமைச்சரவையில் தொடங்கி, இதுவரை ஏழு பட்ஜெட்களை சட்டசபையில் தாக்கல் செய்துள்ளார் ஓபிஎஸ். இது, அவர் தாக்கல் செய்யும் 8ஆவது பட்ஜெட்.

இந்த பட்ஜெட் குறித்து, பட்ஜெட் தாக்கலின் போது சபையில் இல்லாமல் வெளிநடப்பு செய்த மு.க.ஸ்டாலின், பின்னர் வெளியில் கூறியது…

ஜி.எஸ்.டி.யால் ரூ.9,000 கோடி இழப்பு ஏற்படும் என்று ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால் ஜி.எஸ்.டி.யால் பலனும் லாபமும் அடைந்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. மத்திய அரசுக்கு ஜால்ரா போடும் பட்ஜெட் உரை தாக்கல் செய்துள்ளது என மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

நெசவாளர்கள், மீனவர்கள், விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் எந்தத் திட்டமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மீனவர்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மேலும் நிதி மேலாண்மை மோசமான நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது.

மாநிலத்தின் நிதி நிலை ஸ்தம்பித்துள்ளது என்பது இந்த பட்ஜெட்டில் தெரிகிறது. ஓட்டை பானையில் சமையல் செய்ய முயற்சித்து இருக்கிறார்கள் என்பதே இன்றைய பட்ஜெட்

தமிழக பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை. விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள் முன்னேற்றத்திற்கு எந்த திட்டமும் இல்லை… என்று கூறினார் ஸ்டாலின்.

முன்னதாக, இன்று காலை அவைக்கு கறுப்பு சட்டைஅணிந்து வந்தார்கள் திமுக.,வினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு முயற்சி எடுக்கவில்லை என்று கூறி உடனே வெளிநடப்பு செய்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories