மயிலாப்பூர் எம்.எல்.ஏ.,வுக்கு சில கேள்விகள்?: சட்டமன்றத்தில் குரல் கொடுக்காதது ஏன்?

Natraj ips mylapore mla - 2026

சென்னை: மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நடராஜ்க்கு மயிலை தொகுதி மக்கள் சில கேள்விகளை முன்வைத்துள்ளனர். இது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகப் பரவி வருகிறது.

அண்மைக் காலத்தில் இந்து மத விரோத செயல்களால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில், தி.க., உள்ளிட்ட கழக குடும்ப அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட சாதியினரை இழிவு படுத்தும் நோக்கிலேயே அரசியல் செய்வதை வாடிக்கையாகக்  கொண்டிருக்கின்றன. பார்ப்பனர்களின் பூணூல் அறுப்பு, குடுமி கத்திரிப்பு, கோயில்களில் அவமரியாதை செய்வது என்று இயங்கும் இவர்கள், அண்மையில் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதியில் சிலரின் பூணூலை அறுத்து கொலைவெறித் தாக்குதலிலும் ஈடுபட்டனர்.

மற்ற அமைப்புகளுக்கு சட்டமன்றத்தில் குரல் கொடுக்க உறுப்பினர்கள் பலர் இருப்பதால், தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களான பார்ப்பனர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க அமைப்பின் சார்பிலான உறுப்பினர்கள் எவரும் இல்லை. இந்நிலையில், அதிமுக., சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு, தொகுதியில் அதிகமுள்ள பார்ப்பன சமுதாயத்துக்காக தொகுதி எம்.எல்.ஏ., நட்ராஜ் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று கேள்விகளை எழுப்புகின்றனர்.

அந்தக் கேள்விகள் இதோ…

மயிலாபூர் சட்டமன்ற உறுப்பினர் திரு நடராஜன் அவர்களுக்கு,
ஐயா,
பெரு மதிற்பிற்கும், மரியாதைக்கும் உரிய தாங்கள் ஓர் நேர்மையானவர், துணிச்சலானவர், ஆற்றல் மிக்கவர் என்பதாலும் தாங்கள் முன்னாள் காவல் துறை அதிகாரி, இந்நாள் மயிலை MLA என்பதாலும் தங்களிடம் சில கேள்விகள்??

1. மயிலை தொகுதியில் பெருவாரியான வாக்குகள் பிராமணர்களுடையது!! ஜாதி அடிப்படை இல்லையேனும், மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு தாங்கள் செய்தது என்ன??

2. மயிலையில் பன்றிக்கு பூணூல் போடுவதாக ஆர்ப்பாட்டம் செய்த போது என்ன செய்தீர்கள்??

3. 15 பிராமணர் பூணூலை அறுத்துள்ளனர்; அதற்காக சட்டமன்றத்தில் என்ன கேள்வி எழுப்பினீர்கள்?

4. 2 பிராமணர் குடுமியறுக்கும் போது சட்டமன்றத்தில் என்ன கேள்வி எழுப்பினீர்கள்?

5. குறிப்பிட்டு மயிலையில் குறிவைத்து பிராமணர் தாக்கப்படுவதை ஏன் தாங்கள் கண்டிப்பதில்லை??

சட்டமன்றத்தில் குரல் கொடுக்கத்தானே தாங்கள் மன்ற உறுப்பினராக தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்  பட்டீர்கள். இதற்காக தாங்கள் என்ன செய்யப்  போகிறீர்கள்?  – என்று கேள்வி எழுப்புகின்றனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories