December 6, 2025, 1:52 AM
26 C
Chennai

பழமொழி சொன்னா அனுபவிக்கணும்; கேள்வி கேட்கக் கூடாது…! ஆனா ஸ்டாலின்கிட்ட கேக்கறாங்களே..!

2g case book by rasa released stalin speech - 2025

யானை வரும் முன்னே.. மணி ஓசை வரும் பின்னே… இப்படி யாராவது பழமொழி சொன்னால் என்ன நீங்கள் என்ன சொல்வீர்கள்! இதுதான் தமிழ் வளர்த்த லட்சணமா என்று கேட்க மாட்டீர்களா? அல்லது சரிதான், முன்னே பின்னே மாற்றிப் பேசினால் என்ன குறைந்துவிடப் போகிறது என்பீர்களா?

எப்படியும் இருக்கட்டும், முத்தமிழ் வித்தகர் என்றெல்லாம் பட்டப் பெயரைச் சூட்டிக்கொண்டிருக்கும் மு.கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின், இப்படித்தான் பழமொழியை மாற்றிச் சொன்னார். அதற்கு சமூக வலைத்தளங்களில் கிண்டலும் கேலியுமாக அமர்க்களப் படுகிறது.

பழமொழி சொன்னா அனுபவிக்கணும்; கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது என்று கமல் பாணியில் யாரேனும் சொன்னால், அதுதான் தமிழகத்தில் திராவிட ஆட்சியில் தமிழ் வளர்த்த நிலை என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எழுதிய “2ஜி அவிழும் உண்மைகள்” என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் திமுக., பொதுச் செயலாளர் அன்பழகன், செயல் தலைவர் ஸ்டாலின், இந்து ராம், கி.வீரமணி, வைரமுத்து, கனிமொழி, சுப. வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் ராஜா கைய வச்சா என்ற பாடல் வரியைக் கூறி மு.க.ஸ்டாலின் தனது பேச்சைத் தொடங்கினார்.

2ஜி வழக்கு குறித்து ஆ.ராசா எழுதிய நூல் வெளியிடப்படும் முன்னரே அந்த வழக்கில் விடுதலை கிடைத்து விட்டதாக ஸ்டாலின் தமது உரையில் குறிப்பிட்டார். 2ஜி புகார் எழுந்த போது ஆ.ராசாவை பதவி விலகச் சொல்லி அனைத்துத் தரப்பினரும் கூக்குரலிட்டதாகவும், தற்போது நிரவ் மோடி விவகாரம் உள்ளிட்ட ஊழல் புகார்கள் எழுந்துள்ள நிலையிலும் யாரும், யாரையும் பதவி விலகுமாறு கூறவில்லை என்றும் ஸ்டாலின் சாடினார்.

இப்படி நூல் வெளியிடப் படும் முன்னரே விடுதலை கிடைத்துவிட்டதாகக் கூறிய ஸ்டாலின், யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே என்று பழமொழியில் முன்னே பின்னே மாற்றிச் சொல்லி நகைப்பை ஏற்படுத்தினார். ஸ்டாலின் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில், விடுதலை கிடைப்பதற்காக புத்தகம் எழுதி, அது வெளிவரும் முன் கீழ் நீதிமன்றம் விடுதலை அளித்தாலும், அடுத்து உயர் நீதிமன்றம் என செய்யப் போகிறது என்பது வருங்காலத்தில் தெரிந்துவிடும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories