பழமொழி சொன்னா அனுபவிக்கணும்; கேள்வி கேட்கக் கூடாது…! ஆனா ஸ்டாலின்கிட்ட கேக்கறாங்களே..!

2g case book by rasa released stalin speech - 2026

யானை வரும் முன்னே.. மணி ஓசை வரும் பின்னே… இப்படி யாராவது பழமொழி சொன்னால் என்ன நீங்கள் என்ன சொல்வீர்கள்! இதுதான் தமிழ் வளர்த்த லட்சணமா என்று கேட்க மாட்டீர்களா? அல்லது சரிதான், முன்னே பின்னே மாற்றிப் பேசினால் என்ன குறைந்துவிடப் போகிறது என்பீர்களா?

எப்படியும் இருக்கட்டும், முத்தமிழ் வித்தகர் என்றெல்லாம் பட்டப் பெயரைச் சூட்டிக்கொண்டிருக்கும் மு.கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின், இப்படித்தான் பழமொழியை மாற்றிச் சொன்னார். அதற்கு சமூக வலைத்தளங்களில் கிண்டலும் கேலியுமாக அமர்க்களப் படுகிறது.

பழமொழி சொன்னா அனுபவிக்கணும்; கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது என்று கமல் பாணியில் யாரேனும் சொன்னால், அதுதான் தமிழகத்தில் திராவிட ஆட்சியில் தமிழ் வளர்த்த நிலை என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எழுதிய “2ஜி அவிழும் உண்மைகள்” என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் திமுக., பொதுச் செயலாளர் அன்பழகன், செயல் தலைவர் ஸ்டாலின், இந்து ராம், கி.வீரமணி, வைரமுத்து, கனிமொழி, சுப. வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் ராஜா கைய வச்சா என்ற பாடல் வரியைக் கூறி மு.க.ஸ்டாலின் தனது பேச்சைத் தொடங்கினார்.

2ஜி வழக்கு குறித்து ஆ.ராசா எழுதிய நூல் வெளியிடப்படும் முன்னரே அந்த வழக்கில் விடுதலை கிடைத்து விட்டதாக ஸ்டாலின் தமது உரையில் குறிப்பிட்டார். 2ஜி புகார் எழுந்த போது ஆ.ராசாவை பதவி விலகச் சொல்லி அனைத்துத் தரப்பினரும் கூக்குரலிட்டதாகவும், தற்போது நிரவ் மோடி விவகாரம் உள்ளிட்ட ஊழல் புகார்கள் எழுந்துள்ள நிலையிலும் யாரும், யாரையும் பதவி விலகுமாறு கூறவில்லை என்றும் ஸ்டாலின் சாடினார்.

இப்படி நூல் வெளியிடப் படும் முன்னரே விடுதலை கிடைத்துவிட்டதாகக் கூறிய ஸ்டாலின், யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே என்று பழமொழியில் முன்னே பின்னே மாற்றிச் சொல்லி நகைப்பை ஏற்படுத்தினார். ஸ்டாலின் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில், விடுதலை கிடைப்பதற்காக புத்தகம் எழுதி, அது வெளிவரும் முன் கீழ் நீதிமன்றம் விடுதலை அளித்தாலும், அடுத்து உயர் நீதிமன்றம் என செய்யப் போகிறது என்பது வருங்காலத்தில் தெரிந்துவிடும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories