போலி கார்டு; போலீஸிடம் மோசடி! ரூ.20 ஆயிரம் ‘சுட்ட’ மர்ம நபர்!

atm robbery - 2026

ஏடிஎம்மில் போலீஸ்காரரிடம் ரூ.20,000 நூதன மோசடி செய்துள்ளார் மர்ம நபர். அதுவும் ஏடிஎம்.மில் பணம் எடுக்க உதவுவது போல் செயல்பட்டு, பணத்துடன் தலைமறைவாகியுள்ளார் அந்த மர்ம நபர்.

விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம்மில் வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் நாகரீக தோற்றத்துடன் மர்ம நபர் ஒருவர் இருந்துளார். அப்போது சீருடை அணியாத போலீஸ்காரர் ஒருவர் பணம் எடுப்பதற்காக ஏடிஎம்.,முக்குச் சென்றுள்ளார்.

அவரது ஏடிஎம்., கார்டை பயன்படுத்தியபோது பணம் வரவில்லை. அதை கவனித்த அந்த நபர், தான் அவருக்கு உதவி செய்வதாகக் கூறி அவருடைய ஏடிஎம் கார்டை வாங்கி இயந்திரத்தில் போட்டுள்ளார். பிறகு, அந்த போலீஸ்காரரிடம் பின் நம்பரை கேட்டு அதனை அந்த நபரே பதிவிட்டுள்ளார். இருப்பினும் பணம் வரவில்லை. என்வே, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லை என மெஷினில் இருந்து கார்டை எடுத்து திருப்பிக் கொடுத்துள்ளார்.

அவ்வாறு திருப்பிக் கொடுக்கும் போது அந்த நபர் தான் வைத்திருந்த வேறொரு ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். உடனே அருகிலுள்ள வேறொரு ஏடிஎம்முக்குச் சென்ற அந்த நபர், இரண்டு முறை பதிவிட்டு 20 ஆயிரம் பணத்தை அந்த போலீஸ்காரரின் வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துள்ளார்.

சிறிது நேரத்தில் அந்த போலீஸ்காரரின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் பணம் எடுக்கப்பட்ட விவரம் வந்ததும் அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர், தன்  பர்சில் உள்ள ஏடிஎம் கார்டை எடுத்துப் பார்த்தபோது அது போலி என தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்,  வங்கி மேலாளரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார்.

போலீஸ்காரரிடமே ரூ.20 ஆயிரம் அபேஸ் செய்த மர்ம ஆசாமியை வங்கி ஏடிஎம்.,மில் பதிவாகியிருக்கும் உருவத்தை வைத்து கண்டுபிடித்து விடலாம் என்று கூறியுள்ளனர். இது விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories