December 5, 2025, 5:14 PM
27.9 C
Chennai

போலி கார்டு; போலீஸிடம் மோசடி! ரூ.20 ஆயிரம் ‘சுட்ட’ மர்ம நபர்!

atm robbery - 2025

ஏடிஎம்மில் போலீஸ்காரரிடம் ரூ.20,000 நூதன மோசடி செய்துள்ளார் மர்ம நபர். அதுவும் ஏடிஎம்.மில் பணம் எடுக்க உதவுவது போல் செயல்பட்டு, பணத்துடன் தலைமறைவாகியுள்ளார் அந்த மர்ம நபர்.

விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம்மில் வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் நாகரீக தோற்றத்துடன் மர்ம நபர் ஒருவர் இருந்துளார். அப்போது சீருடை அணியாத போலீஸ்காரர் ஒருவர் பணம் எடுப்பதற்காக ஏடிஎம்.,முக்குச் சென்றுள்ளார்.

அவரது ஏடிஎம்., கார்டை பயன்படுத்தியபோது பணம் வரவில்லை. அதை கவனித்த அந்த நபர், தான் அவருக்கு உதவி செய்வதாகக் கூறி அவருடைய ஏடிஎம் கார்டை வாங்கி இயந்திரத்தில் போட்டுள்ளார். பிறகு, அந்த போலீஸ்காரரிடம் பின் நம்பரை கேட்டு அதனை அந்த நபரே பதிவிட்டுள்ளார். இருப்பினும் பணம் வரவில்லை. என்வே, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லை என மெஷினில் இருந்து கார்டை எடுத்து திருப்பிக் கொடுத்துள்ளார்.

அவ்வாறு திருப்பிக் கொடுக்கும் போது அந்த நபர் தான் வைத்திருந்த வேறொரு ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். உடனே அருகிலுள்ள வேறொரு ஏடிஎம்முக்குச் சென்ற அந்த நபர், இரண்டு முறை பதிவிட்டு 20 ஆயிரம் பணத்தை அந்த போலீஸ்காரரின் வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துள்ளார்.

சிறிது நேரத்தில் அந்த போலீஸ்காரரின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் பணம் எடுக்கப்பட்ட விவரம் வந்ததும் அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர், தன்  பர்சில் உள்ள ஏடிஎம் கார்டை எடுத்துப் பார்த்தபோது அது போலி என தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்,  வங்கி மேலாளரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார்.

போலீஸ்காரரிடமே ரூ.20 ஆயிரம் அபேஸ் செய்த மர்ம ஆசாமியை வங்கி ஏடிஎம்.,மில் பதிவாகியிருக்கும் உருவத்தை வைத்து கண்டுபிடித்து விடலாம் என்று கூறியுள்ளனர். இது விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories