February 21, 2026, 7:41 PM
29 C
Chennai

போலி கார்டு; போலீஸிடம் மோசடி! ரூ.20 ஆயிரம் ‘சுட்ட’ மர்ம நபர்!

atm robbery - 2026

ஏடிஎம்மில் போலீஸ்காரரிடம் ரூ.20,000 நூதன மோசடி செய்துள்ளார் மர்ம நபர். அதுவும் ஏடிஎம்.மில் பணம் எடுக்க உதவுவது போல் செயல்பட்டு, பணத்துடன் தலைமறைவாகியுள்ளார் அந்த மர்ம நபர்.

விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம்மில் வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் நாகரீக தோற்றத்துடன் மர்ம நபர் ஒருவர் இருந்துளார். அப்போது சீருடை அணியாத போலீஸ்காரர் ஒருவர் பணம் எடுப்பதற்காக ஏடிஎம்.,முக்குச் சென்றுள்ளார்.

அவரது ஏடிஎம்., கார்டை பயன்படுத்தியபோது பணம் வரவில்லை. அதை கவனித்த அந்த நபர், தான் அவருக்கு உதவி செய்வதாகக் கூறி அவருடைய ஏடிஎம் கார்டை வாங்கி இயந்திரத்தில் போட்டுள்ளார். பிறகு, அந்த போலீஸ்காரரிடம் பின் நம்பரை கேட்டு அதனை அந்த நபரே பதிவிட்டுள்ளார். இருப்பினும் பணம் வரவில்லை. என்வே, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லை என மெஷினில் இருந்து கார்டை எடுத்து திருப்பிக் கொடுத்துள்ளார்.

அவ்வாறு திருப்பிக் கொடுக்கும் போது அந்த நபர் தான் வைத்திருந்த வேறொரு ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். உடனே அருகிலுள்ள வேறொரு ஏடிஎம்முக்குச் சென்ற அந்த நபர், இரண்டு முறை பதிவிட்டு 20 ஆயிரம் பணத்தை அந்த போலீஸ்காரரின் வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துள்ளார்.

சிறிது நேரத்தில் அந்த போலீஸ்காரரின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் பணம் எடுக்கப்பட்ட விவரம் வந்ததும் அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர், தன்  பர்சில் உள்ள ஏடிஎம் கார்டை எடுத்துப் பார்த்தபோது அது போலி என தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்,  வங்கி மேலாளரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார்.

போலீஸ்காரரிடமே ரூ.20 ஆயிரம் அபேஸ் செய்த மர்ம ஆசாமியை வங்கி ஏடிஎம்.,மில் பதிவாகியிருக்கும் உருவத்தை வைத்து கண்டுபிடித்து விடலாம் என்று கூறியுள்ளனர். இது விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories