போலி கார்டு; போலீஸிடம் மோசடி! ரூ.20 ஆயிரம் ‘சுட்ட’ மர்ம நபர்!

atm robbery - 2026

ஏடிஎம்மில் போலீஸ்காரரிடம் ரூ.20,000 நூதன மோசடி செய்துள்ளார் மர்ம நபர். அதுவும் ஏடிஎம்.மில் பணம் எடுக்க உதவுவது போல் செயல்பட்டு, பணத்துடன் தலைமறைவாகியுள்ளார் அந்த மர்ம நபர்.

விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம்மில் வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் நாகரீக தோற்றத்துடன் மர்ம நபர் ஒருவர் இருந்துளார். அப்போது சீருடை அணியாத போலீஸ்காரர் ஒருவர் பணம் எடுப்பதற்காக ஏடிஎம்.,முக்குச் சென்றுள்ளார்.

அவரது ஏடிஎம்., கார்டை பயன்படுத்தியபோது பணம் வரவில்லை. அதை கவனித்த அந்த நபர், தான் அவருக்கு உதவி செய்வதாகக் கூறி அவருடைய ஏடிஎம் கார்டை வாங்கி இயந்திரத்தில் போட்டுள்ளார். பிறகு, அந்த போலீஸ்காரரிடம் பின் நம்பரை கேட்டு அதனை அந்த நபரே பதிவிட்டுள்ளார். இருப்பினும் பணம் வரவில்லை. என்வே, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லை என மெஷினில் இருந்து கார்டை எடுத்து திருப்பிக் கொடுத்துள்ளார்.

அவ்வாறு திருப்பிக் கொடுக்கும் போது அந்த நபர் தான் வைத்திருந்த வேறொரு ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். உடனே அருகிலுள்ள வேறொரு ஏடிஎம்முக்குச் சென்ற அந்த நபர், இரண்டு முறை பதிவிட்டு 20 ஆயிரம் பணத்தை அந்த போலீஸ்காரரின் வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துள்ளார்.

சிறிது நேரத்தில் அந்த போலீஸ்காரரின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் பணம் எடுக்கப்பட்ட விவரம் வந்ததும் அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர், தன்  பர்சில் உள்ள ஏடிஎம் கார்டை எடுத்துப் பார்த்தபோது அது போலி என தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்,  வங்கி மேலாளரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார்.

போலீஸ்காரரிடமே ரூ.20 ஆயிரம் அபேஸ் செய்த மர்ம ஆசாமியை வங்கி ஏடிஎம்.,மில் பதிவாகியிருக்கும் உருவத்தை வைத்து கண்டுபிடித்து விடலாம் என்று கூறியுள்ளனர். இது விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories