சென்னையில் ஐபிஎல்., போட்டிகள்: போக்குவரத்தில் மாற்றம்

chepauk ground - 2026

சென்னை: ஏப்ரல் 10, 20, 28, 30 மற்றும் மே 5, 13, 20 ஆகிய நாட்களில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில், ஏப்ரல் 10, 20, 28, 30, மே 20 ஆகிய தேதிகளில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. அன்றைய தேதிகளில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது

மே 5, 13 தேதிகளில் மாலை 4 மணிக்கு போட்டி தொடங்கும். அன்றைய தேதிகளில் மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த 7 நாட்களிலும் பெல்ஸ் சாலை தற்காலிகமாக, ஒருவழிப் பாதையாக மாற்றப்படும்.  பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

வாலாஜா சாலை சந்திப்பில் இருந்து பெல்ஸ் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படும்.  கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகு, இந்த மாற்றம் அப்படியே தலை மாற்றி செயல்படுத்தப்படும்.

காமராஜர் சாலையில் இருந்து பாரதி சாலைக்கு மாநகர பேருந்துகள், அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப் படும் என்றும் காவல்துறை கூறியுள்ளது. கெனால் சாலை, பாரதி சாலையில் இருந்து ஒருவழிப் பாதையாக இருக்கும் என்றும் வாலாஜா சாலையில் இருந்து வாகன அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அண்ணா சாலை வழியாக M,P,T,W,V எழுத்துக்கள் கொண்ட அட்டையுள்ள வாகனங்கள் மட்டுமே வாலாஜா சாலையில் செல்லலாம் என்றும், அனுமதி அட்டையுள்ள வாகனங்கள் பெல்ஸ் சாலை, பாரதி சாலை, கெனால் சாலையில் வாகன நிறுத்துமிடத்துக்கு செல்லலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

B, R எழுத்துக்கள் கொண்ட அனுமதி அட்டையுள்ள வாகனங்கள் வாலாஜா சாலை வழியாக வாகன நிறுத்துமிடம் செல்லலாம்

போர் நினைவுச் சின்னம், காந்தி சிலை வழியாக காமராஜர் சாலையில் வரும் மாநகர பேருந்துகள் பாரதி சாலையில் அனுமதிக்கப்படும் என்றும், M,P,T,W,V எழுத்துக்கள் கொண்ட அட்டையுள்ள வாகனங்கள் பாரதி சாலை வழியாக கெனால் சாலையில் சென்று நிறுத்தலாம் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள் PWD எதிரில், கடற்கரை உட்புறச் சாலையில் நிறுத்த வேண்டும் என்றும், அனுமதி அட்டையில்லாத வாகனங்களை கடற்கரை உட்புறச் சாலையில் நிறுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories