February 22, 2026, 4:32 AM
25.6 C
Chennai

சென்னையில் ஐபிஎல்., போட்டிகள்: போக்குவரத்தில் மாற்றம்

chepauk ground - 2026

சென்னை: ஏப்ரல் 10, 20, 28, 30 மற்றும் மே 5, 13, 20 ஆகிய நாட்களில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில், ஏப்ரல் 10, 20, 28, 30, மே 20 ஆகிய தேதிகளில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. அன்றைய தேதிகளில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது

மே 5, 13 தேதிகளில் மாலை 4 மணிக்கு போட்டி தொடங்கும். அன்றைய தேதிகளில் மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த 7 நாட்களிலும் பெல்ஸ் சாலை தற்காலிகமாக, ஒருவழிப் பாதையாக மாற்றப்படும்.  பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

வாலாஜா சாலை சந்திப்பில் இருந்து பெல்ஸ் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படும்.  கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகு, இந்த மாற்றம் அப்படியே தலை மாற்றி செயல்படுத்தப்படும்.

காமராஜர் சாலையில் இருந்து பாரதி சாலைக்கு மாநகர பேருந்துகள், அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப் படும் என்றும் காவல்துறை கூறியுள்ளது. கெனால் சாலை, பாரதி சாலையில் இருந்து ஒருவழிப் பாதையாக இருக்கும் என்றும் வாலாஜா சாலையில் இருந்து வாகன அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அண்ணா சாலை வழியாக M,P,T,W,V எழுத்துக்கள் கொண்ட அட்டையுள்ள வாகனங்கள் மட்டுமே வாலாஜா சாலையில் செல்லலாம் என்றும், அனுமதி அட்டையுள்ள வாகனங்கள் பெல்ஸ் சாலை, பாரதி சாலை, கெனால் சாலையில் வாகன நிறுத்துமிடத்துக்கு செல்லலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

B, R எழுத்துக்கள் கொண்ட அனுமதி அட்டையுள்ள வாகனங்கள் வாலாஜா சாலை வழியாக வாகன நிறுத்துமிடம் செல்லலாம்

போர் நினைவுச் சின்னம், காந்தி சிலை வழியாக காமராஜர் சாலையில் வரும் மாநகர பேருந்துகள் பாரதி சாலையில் அனுமதிக்கப்படும் என்றும், M,P,T,W,V எழுத்துக்கள் கொண்ட அட்டையுள்ள வாகனங்கள் பாரதி சாலை வழியாக கெனால் சாலையில் சென்று நிறுத்தலாம் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள் PWD எதிரில், கடற்கரை உட்புறச் சாலையில் நிறுத்த வேண்டும் என்றும், அனுமதி அட்டையில்லாத வாகனங்களை கடற்கரை உட்புறச் சாலையில் நிறுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories