தீக்காயத்துடன் போராடிய வைகோ.,வின் உறவினர் சரவணன் சுரேஷ் உயிரிழப்பு

saravanan suresh set fire - 2026
மதுரை: காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்பதை வலியுறுத்தியும் நடந்த போராட்டத்தின் பின்னர், பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வைகோ பேசிய பேச்சை செய்தி டிவி.,க்களில் கேட்டு மனமுடைந்து விருதுநகரில் தீக்குளித்த வைகோவின் உறவினர் சரவணன் சுரேஷ் சிகிச்சை பலனளிக்காத நிலையில், மதுரையில் இன்று உயிரிழந்தார்.

வைகோவின் மனைவி ரேணுகாதேவியின் சகோதரர் ராமானுஜத்தின் மகன் சரவணன் சுரேஷ். இவர் வைகோவுடன் நிழலாக இருந்து கொண்டு, அவருடன் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். காவிரிக்காக நடத்தப் பட்ட போராட்டங்களில் வைகோவின் பேச்சுகளைக் கேட்டு மனம் உடைந்த நிலையில் இருந்து வந்தார். தொடர்ந்து, அவருடன் போராட்டங்களில் இருந்து வந்தார்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அந்த ஆலையிடம் இருந்து வைகோ கமிஷன் வாங்கிவிட்டதாக, நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட சிலர் சமூக இணையதளங்களில் மீம்ஸ்களைப் போட்டிருப்பது கண்டு, சரவணன் சுரேஷ், வைகோவிடம் வருத்தப் பட்டுக் கூறியுள்ளார். அதற்கு அவர் சரவணனை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டாராம்.

ALSO READ:  சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..

இதனால் ஏற்கெனவே மனச் சோர்வில் இருந்த சுரேஷ், வைகோ செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், பிரதமர் நரேந்திர மோடியை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து, மோடி நீ ஒரு கோழை என்று ஒருமையில் பேசி, தைரியம் இருந்தால் ஹெலிகாப்டரிலேயே பறக்காமல் சாலை வழியாக வந்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தைக் கண்டு செல் என்று வைகோ பேசிய பேச்சைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தாராம். இதனால், நேற்று காலை நடைப்பயிற்சி மேற்கொள்வதாகக் கூறி விருதுநகர் விளையாட்டு மைதானத்துக்கு சென்றவர், அங்கே யாரும் எதிர்பாராத வகையில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள், உடனடியாக, அவரை மீட்டு மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். 80 சதவீத தீக்காயம் அடைந்த சரவணன் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 1 மணி அளவில் சரவணன் சுரேஷ் உயிரிழந்தார்.

ALSO READ:  சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

நியூட்ரினோவுக்கு எதிராக வைகோ நடைப்பயணம் கிளம்பிய போது, மதுரையில் வைகோவின் மிக நெருங்கிய தொண்டர் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டார். அப்போது யாரும் தீக்குளிக்க வேண்டாம் என்று வைகோ வருந்திக் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories