சென்னை ஜே.ஜே.நகர் காவல் உதவி ஆணையர் கமீல்பாஷா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: மறைக்கப்பட்ட உண்மை!

ac police kamal basha 1 - 2026

சென்னை ஜெ.ஜெ. நகர் உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக, லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்திற்குள் நேற்றிரவு அதிரடியாக நுழைந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், அங்குள்ள உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது, உதவி ஆணையர் கமில்பாஷா மற்றும் அவரது நண்பர் ஒருவரும் அலுவலகத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த சோதனையில் அலுவலகத்தில் இருந்த இரண்டரை லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. உதவி ஆணையர் கமில்பாஷாவின் நண்பரிடம் இருந்த 2 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

இப்படித்தான் செய்திகள் நேற்றைய இரவு சோதனை குறித்து வெளிவந்தது. ஆனால், இந்த செய்தியின் பின்னணியில் வேறு விவகாரம் இருப்பதாக காவலர்களே கிசுகிசுத்தனர்.

திருமங்கலம் உதவி ஆணையாளர் கமீல்பாஷா, லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடிப்பட்டார் என்றும், இந்த உண்மையை லஞ்ச ஒழிப்புத் துறையினரே மறைப்பதாகவும் பேசப்படுகிறது.

ஏப்ரல் 13ஆம் தேதி இரவு 10.30 மணியில் இருந்து ஏப்.14 அதாவது இன்று அதிகாலை 3 மணி வரை டிஎஸ்பி., லவகுமார் தலைமையில் வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் (CC2 Team) ஜே.ஜே. நகர் காவல் நிலையத்தின் மேல் உள்ள திருமங்கலம் உதவி ஆணையாளர் கமீல் பாஷாவின் அறையில் இருந்து கணக்கில் வராத ரூ.2.5லட்சம் பணத்தையும், சோதனையின் போது உதவி ஆணையர் அறையில் இருந்த கொடுங்கையூர் பில்டர் செல்வம் (இவர், உதவி ஆணையரைப் பார்க்க வந்ததாகக் கூறுகிறார், நண்பர் என்றும் கூறப்படுகிறது) என்பவரிடம் இருந்த ரூ.2,58,500 பணம் ஆக மொத்தம் ரூ 5,08,500 பணத்தைக் கைப்பற்றிச் சென்றனர்.

ஆனால், இது குறித்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்றும், பணம் உதவி ஆணையர் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்டது தொடர்பாக ஜே.ஜே.நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாண்டியராஜனை (2011 பேட்ச்) லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்தனர் என்றும், இவர் உதவி ஆணையரின் ஸ்பெஷல் டீம் எஸ்.ஐ., ஆக உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, யாரும் கைது செய்யப்படவில்லை. உண்மையில் கமீல்பாஷா, பில்டர் செல்வத்திடமிருந்து பணம் வாங்கும் போது கையும், களவுமாகப் பிடிபட்டுள்ளாராம்.

ஆனால் சென்னையில் லஞ்சம் வாங்கும் போது, உதவி ஆணையர் பிடிபட்டார் என்ற செய்தி பரவினால், சென்னை மாநகர போலீசார் மீது அதிருப்தி ஏற்படும் என்பதால், பல உண்மைகள் மறைக்கப்படுவதாக காவலர்களே அதிருப்தியுடன் பேசிக் கொண்டிருக் கின்றனராம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories