December 5, 2025, 11:49 PM
26.6 C
Chennai

சென்னை ஜே.ஜே.நகர் காவல் உதவி ஆணையர் கமீல்பாஷா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: மறைக்கப்பட்ட உண்மை!

ac police kamal basha 1 - 2025

சென்னை ஜெ.ஜெ. நகர் உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக, லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்திற்குள் நேற்றிரவு அதிரடியாக நுழைந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், அங்குள்ள உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது, உதவி ஆணையர் கமில்பாஷா மற்றும் அவரது நண்பர் ஒருவரும் அலுவலகத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த சோதனையில் அலுவலகத்தில் இருந்த இரண்டரை லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. உதவி ஆணையர் கமில்பாஷாவின் நண்பரிடம் இருந்த 2 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

இப்படித்தான் செய்திகள் நேற்றைய இரவு சோதனை குறித்து வெளிவந்தது. ஆனால், இந்த செய்தியின் பின்னணியில் வேறு விவகாரம் இருப்பதாக காவலர்களே கிசுகிசுத்தனர்.

திருமங்கலம் உதவி ஆணையாளர் கமீல்பாஷா, லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடிப்பட்டார் என்றும், இந்த உண்மையை லஞ்ச ஒழிப்புத் துறையினரே மறைப்பதாகவும் பேசப்படுகிறது.

ஏப்ரல் 13ஆம் தேதி இரவு 10.30 மணியில் இருந்து ஏப்.14 அதாவது இன்று அதிகாலை 3 மணி வரை டிஎஸ்பி., லவகுமார் தலைமையில் வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் (CC2 Team) ஜே.ஜே. நகர் காவல் நிலையத்தின் மேல் உள்ள திருமங்கலம் உதவி ஆணையாளர் கமீல் பாஷாவின் அறையில் இருந்து கணக்கில் வராத ரூ.2.5லட்சம் பணத்தையும், சோதனையின் போது உதவி ஆணையர் அறையில் இருந்த கொடுங்கையூர் பில்டர் செல்வம் (இவர், உதவி ஆணையரைப் பார்க்க வந்ததாகக் கூறுகிறார், நண்பர் என்றும் கூறப்படுகிறது) என்பவரிடம் இருந்த ரூ.2,58,500 பணம் ஆக மொத்தம் ரூ 5,08,500 பணத்தைக் கைப்பற்றிச் சென்றனர்.

ஆனால், இது குறித்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்றும், பணம் உதவி ஆணையர் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்டது தொடர்பாக ஜே.ஜே.நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாண்டியராஜனை (2011 பேட்ச்) லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்தனர் என்றும், இவர் உதவி ஆணையரின் ஸ்பெஷல் டீம் எஸ்.ஐ., ஆக உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, யாரும் கைது செய்யப்படவில்லை. உண்மையில் கமீல்பாஷா, பில்டர் செல்வத்திடமிருந்து பணம் வாங்கும் போது கையும், களவுமாகப் பிடிபட்டுள்ளாராம்.

ஆனால் சென்னையில் லஞ்சம் வாங்கும் போது, உதவி ஆணையர் பிடிபட்டார் என்ற செய்தி பரவினால், சென்னை மாநகர போலீசார் மீது அதிருப்தி ஏற்படும் என்பதால், பல உண்மைகள் மறைக்கப்படுவதாக காவலர்களே அதிருப்தியுடன் பேசிக் கொண்டிருக் கின்றனராம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories