December 5, 2025, 5:51 PM
27.9 C
Chennai

பெண் நிருபரின் கன்னத்தைத் தட்டிய செய்கை: ஆளுநரின் மன்னிப்பும் அவரின் மறுப்பும்!

governor reporter - 2025

செவ்வாய்க்கிழமை நேற்று நடந்த ஆளுநரின் பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த பின்னர், ஒரு கேள்வி கேட்ட பெண் நிருபரின் கன்னத்தில் ஆளுநர் தட்டியதாக சர்ச்சை எழுந்த நிலையில், சம்பந்தப் பட்ட நிருபர் எழுதிய ஈமெயிலுக்கு தனது வருத்தத்தைத் தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறார் ஆளுநர்.

பத்திரிகையாளர் சந்திப்பின்போது பெண் பத்திரிகையாளரை கன்னத்தில் தட்டியதாக சர்ச்சையில் சிக்கிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சம்பந்தப்பட்ட பத்திரிகையாளருக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறார். அதில் தனது நடவடிக்கை குறித்தும் விளக்கம் அளித்திருக்கிறார்.

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்ட நிலையில் அவரது ஆடியோ பேச்சு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டார். இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செவ்வாய்க்கிழமை ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

governor letter - 2025

செய்தியாளர்கள் சந்திப்பு நிறைவடையும்போது, பெண் நிருபர் ஒருவர் ஆளுநரிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதற்கு பதிலளிக்காமல் ஆளுநர் அந்தப் பெண் நிருபரின் கன்னத்தைத் தட்டினார். தன்னுடைய கேள்விக்கு பதிலளிக்காமல் ஆளுநர் கன்னத்தை தட்டியது குறித்து அவர் ட்விட்டரில் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இதை அடுத்து, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு வருத்தம் தெரிவித்து ஆளுநர் கடிதம் எழுதினார். அதில் தனது நடவடிக்கை குறித்தும் விளக்கம் அளித்திருக்கிறார்.

அதில், 18.04.2018 தேதியிட்டு எனக்கு உங்களிடமிருந்து ஒரு இமெயில் வந்துள்ளது. நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பு முடியும் தருவாயில் நான் எழுந்து செல்லவிருந்த வேளையில் நீங்கள் ஒரு கேள்வி எழுப்பினீர்கள். எனக்கு அந்தக் கேள்வி பிடித்திருந்தது. அதற்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில் எனது பேத்தி நிலையில் எண்ணியே நான் தங்கள் கன்னத்தைத் தட்டினேன்.

40 ஆண்டு காலமாக நானும் பத்திரிகையாளராக இருந்தேன் என்ற முறையிலேயே உங்களது பணித் திறனைப் பாராட்டும் வகையில் அவ்வாறு செய்தேன். உங்கள் இமெயில் மூலம், நீங்கள் அந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தேன். உங்கள் உணர்வுகளுக்கு மன்னிப்பளித்து நடந்த சம்பவத்துக்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதற்காக மன்னிப்பு கோருகிறேன்.” – என்று குறிப்பிட்டிருந்தார்.

கடிதத்துக்கு இ மெயில் மூலம் பதில் எதிர்பார்ப்பதாக ஆளுநர் கோரியிருந்ததால், அதற்கு பதில் அளிக்கும் வகையில், ஆளுநரின் வருத்தத்தை ஏற்றுக் கொள்வதாகக் கூறியுள்ள அந்தப் பெண், ஆனால் அதற்கான காரணம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை என்று கூறியுள்ளார்.

lakshmi subramanian tweet - 2025

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: மாண்புமிகு ஆளுநருக்கு, உங்களது மன்னிப்பினை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதே சமயம் நான் கேட்ட கேள்விக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக நீங்கள் நடந்து கொண்டதாக கூறுவது சரி இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories