February 22, 2026, 6:47 AM
25.4 C
Chennai

தரம் தாழ்ந்த சொற்களால் சுயரூபத்தைக் காட்டிய திமுக! ஹெச்.ராஜாவுக்கு பதில் சொன்ன ஆர்.எஸ்.பாரதி!

rsbharathi - 2026

திமுக.,வும் அநாகரீகங்களும் பிரிக்க முடியாதவை என்பதை மெய்ப்பித்து, தங்கள் சுயரூபத்தைக் காட்டியுள்ளார் திமுக., எம்.பி., ஆர்.எஸ். பாரதி.

ஹெச்.ராஜாவின் டிவிட்டர் பதிவு தரம் தாழ்ந்தது என்று விமர்சனம் செய்து வரும் அரசியல்வாதிகள் பலரும் அதை விடத் தரம் தாழ்ந்த பதிவை இட்டுள்ள திமுக., எம்.பி. ஆர்.எஸ். பாரதிக்கு என்ன சொல்வார்களோ?! எதுவும் சொல்ல மாட்டார்கள் என்பதுதான் நிதர்சனம். காரணம் அதை ஆமோதிப்பவர்கள் அவர்கள்!

அண்மையில் அரசியலுக்கு வந்த அற்பனே புரிந்து கொள் என்று ஹெச்.ராஜாவுக்கு பதில் சொல்லியிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி. எச்.ராஜாவே தலைவர் கலைஞரைப் பற்றியோ அவர் குடும்பத்தைப் பற்றியோ பேசுவதற்கு எந்த யோக்கியதையும் இல்லை. என் தலைவர் கலைஞர் சட்டமன்றத்தில் ஆண்மையோடு என் மகள் கனிமொழி என்று சட்டமன்ற குறிப்பில் பதிவு செய்ய வைத்தவர் … என்று குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக, மாற்றான் தோட்டத்துக்கு மல்லிகைக்கு மணம் உண்டு என்ற பரம்பரையில் வந்த திராவிட இயக்கத்தவர்கள், தங்களுக்கு எதிராக யார் குரல் எழுப்பினாலும், அவர்களை சாதி ரீதியாக வசை பாடுவர். அல்லது அவர்கள் வீட்டுப் பெண்களைப் பற்றி காது கொண்டு கேட்க முடியாத அளவுக்கு கொச்சைச் சொற்களால் பேசுவர்.

ஆளுநர் குறித்த விவகாரம் இப்போது பரபரப்பாகப் பேசப்படும் நிலையில், ஆளுநரிடம் மரியாதைக் குறைவாக கேள்விகள் எழுப்பப் படுவது குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா. அவர் இது குறித்த தனது பதிவில்,

தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே.

 

– என்று குறிப்பிட்டிருந்தார். இதில் எங்குமே அந்தத் தலைவர் யார் என்று அவர் பெயர் சொல்லவில்லை. கள்ளக் குழந்தை யாரென்றும் சொல்லவில்லை. மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கிய தலைவரிடம் போய் கேளுங்கள் என்று சொன்னாலும், அந்தத் தலைவர் யார் என்று எந்த ஊடகத்தாரும் கேட்கவில்லை. இத்தனை ‘க்ளூ’ கொடுத்து புரியாத புதிர் போட்டுள்ள ஹெச்.ராஜா, கொலையுண்டு மாண்டுபோன சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா ஆகியோரின் பெயர்களை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார். இவர்களை எல்லாம் கொலை செய்தவர்களின் கொடூரம் தங்கள் மனக்கண்ணில் தோன்றியதுமே, இது போல் அந்தத் தலைவரிடம் கேள்விகளைக் கேட்க அச்சப்படுவார்கள் ஊடகத்தினர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்தனை க்ளூக்களுக்கும் விடை தெரியாத ஊடகத்தினர் உடனே போய் அந்தத் தலைவரிடம் போய் நிற்கவில்லை. ஆனால், இவற்றை எல்லாம் ஆமோதிப்பது போல், திமுக., எம்.பி., ஆர்.எஸ்.பாரதி, அந்த கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தை கனிமொழிதான் என்று வெளிப்படையாகச் சொல்லியுள்ளார். கள்ளக் குழந்தையை மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கியவர் கருணாநிதியே என்று வெளிப் படுத்தியுள்ளார் ஆர்.எஸ்.பாரதி.

ஹெச்.ராஜாவுக்கு பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு, அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவு இது…

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories