பாதிக்கப்பட்ட மாணவிகள் பெயரைச் சொல்ல முடியாது: நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை தீவிரம்

nirmala devi1 - 2026

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியால் தவறான பாதையில் செல்ல அழைக்கப்பட்ட 4 மாணவிகளிடம் சந்தானம் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதே நேரம், அவர்களின் பெயர்களையோ, அடையாளங்களையோ வெளிப்படுத்தக் கூடாது என்று சந்தானம் குழு தெரிவித்துள்ளது.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, பல்கலைக்கழக உயர்பொறுப்புகளில் உள்ளவர்களுக்காக மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து விசாரிக்க முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார். சந்தானத்திற்கு உதவியாக, பேராசிரியைகள் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்துவதற்கு வசதியாக அன்னை தெரசா கல்லூரி பேராசிரியை கமலி, வேளாண் பல்கலைக் கழக பேராசிரியை தியாகேஸ்வரி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக்குழு மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளரிடம் விசாரணை மேற்கொண்டது. தொடர்ந்து நேற்று, சந்தானம் மற்றும் 2 பெண் விசாரணை அதிகாரிகளும் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர். நிர்மலாதேவியால் தவறான பாதைக்கு அழைக்கப்பட்ட மாணவிகள் 4 பேரிடம், அவர்கள் பெற்றோர் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அந்த நால்வரின் அடையாளங்களும் வெளியில் தெரியக்கூடாது என்பதில் விசாரணைக் குழு கவனமாக உள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விசாரணை அதிகாரி சந்தானம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் 9 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும், இன்னும் 12 பேரிடம் விசாரணை நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார். நாளையோ அல்லது புதன்கிழமையோ நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த இருப்பதாகவும் கூறினார். மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவியை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு, சாத்தூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

பேராசிரியை நிர்மலா தேவியை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது- இதற்காக மதுரை சிறையில் இருந்து சாத்தூர் நீதிமன்றத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிர்மலா தேவி அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்குப் பின் நிர்மலா தேவியை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி சிபிசிஐடி-க்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற வளாகத்தினுள்ளே வழக்கறிஞர்களும், வெளியே மாதர் சங்கமும் நிர்மலா தேவிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். பொதுமக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். நீதிமன்றத்துக்கு உள்ளே விடக் கோரி முன்னேறிய அவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தியதால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவலில் எடுக்கப்பட்ட நிர்மலா தேவியிடம், விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்ட்து.

இதனிடையே நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், இந்த வழக்கில் இருந்து திடீரென விலகி உள்ளார். இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, தமக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்றும், சொந்த விருப்பத்தின் பேரிலேயே வழக்கில் இருந்து விலகுவதாகவும் விளக்கமளித்துள்ளார்.

ALSO READ:  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories