January 20, 2025, 6:36 PM
26.2 C
Chennai

அதிமுக., பாஜக., கூட்டுச் சதியில் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்: மு.க.ஸ்டாலின் புது விளக்கம்

தமிழகத்துக்கு எதிரான கூட்டுச்சதிகளில் அதிமுகவும் பாஜகவும் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுகின்றன என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இன்று அதிமுக.,வின் நாளேடான டாக்டர் நமது அம்மாவில் வெளியான கட்டுரை ஒன்றில், பாஜக., அதிமுக., இரண்டும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இணைந்து செயல்பட காலம் கனிந்துவருவதாகக் கூறப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக மு.க.ஸ்டாலின் கூறியபோது, இரண்டும் கூட்டுச் சதியில் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்படுவதாக கூறினார். புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம் பகுதியில் பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்த ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “அதிமுகவும், பாஜகவும் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுவது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மைதான். ஆனால், எந்த வகையில் என்றால், இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுவது எதில் ஏழை – எளிய, கிராமப்புற மக்கள் மருத்துவக் கல்வியை பெற முடியாத வகையில் நீட் தேர்வை கொண்டு வந்ததில் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்டு இருக்கின்றனர்.

ALSO READ:  தென்காசி மாவட்டத்தில் கனமழை! வெள்ளப் பெருக்கில் குற்றால அருவிகள்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், அதை அமைக்க முடியாது என மத்திய அரசு பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு துணையாக இருந்து தமிழக அரசு இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

தமிழக அரசு செய்யும் கொள்ளைகளுக்கு, ஊழல்களுக்கு, மத்திய அரசு துணையாக இருந்து இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுகிறது.

வருமான வரித்துறை சோதனைகள் நடந்து முடிந்தும், ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பாஜகவும், அதிமுகவும் சேர்ந்து கூட்டுச்சதியை இரட்டை குழல் துப்பாக்கிகளாக சேர்ந்து செய்திருக்கின்றனர்.

– என்று பேசினார் ஸ்டாலின்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திருமுருகாற்றுப் படையில் திருப்பரங்குன்றம்!

முதலில் திருப்பரங்குன் றமாகிய படைவீட்டைப் பற்றிச் சொல்கிறார். முருகப்பெருமான் ஆறு படைவீடு களில் எழுந்தருளியிருக்கிறான் என்ற வழக்கு, பலகால மாகத் தமிழ் நாட்டில் இருக்கிறது.

ஐதராபாத் ரயிலை தென்காசி வழியாக இயக்கக் கோரிக்கை!

திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் பாதையில் மாற்றி இயக்கவும் திருவனந்தபுரம் வடக்கு-செங்கோட்டை-மதுரை-தாம்பரம்

முருக பக்தர்களை திமுக அமைச்சர் சேகர் பாபு அவமதித்த விவகாரம்; இந்து முன்னணி கண்டனம்!

திருச்செந்தூரில் முருக பக்தர்களை திமுக., அமைச்சர் சேகர்பாபு அவமதித்த விவகாரத்தில், இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது அந்த அமைப்பின்

பயணிகள் கவனத்துக்கு… நெல்லை சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்!

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில் சேவையில் மாற்றம்எழும்பூர்...