December 5, 2025, 4:22 PM
27.9 C
Chennai

நிர்மலா தேவியிடம் சந்தானம் குழு கிடுக்கிப் பிடி விசாரணை! வீடியோ பதிவு!

nirmala devi1 - 2025

மதுரை: அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் செல்லத் தூண்டும் வகையில் பேசிய வழக்கில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசியை நிர்மலா தேவியிடம், சந்தானம் குழுவினர் இன்று தீவிர விசாரணை  மேற்கொண்டுள்ளனர்.

பல்கலை., வேந்தரான ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தால் நியமிக்கப்பட்ட சந்தானம் குழு, மதுரையில் இரண்டாம் கட்ட விசாரணையை நேற்று தொடங்கியது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை பல்கலை., துணை வேந்தர், பதிவாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், பல்கலைக்கழக அலுவலர்கள் பணியிடமாற்றம் குறித்து விசாரித்தாகவும் விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்தார். மேலும்,  சிறைத்துறையில் அனுமதி பெற்று நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தவுள்ளதாகவும்  தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று அவர் தனது இரண்டாம் கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளார்.

இன்று காலை 9.30 மணி அளவில் மதுரை சிறைக்குச் சென்ற சந்தானம், மற்றும் உதவிக்காக அமர்த்தப் பட்டுள்ள பெண் விசாரணை அதிகாரிகள் தியாகேஸ்வரி, கமலி ஆகியோர் நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் நடத்தும் விசாரணையைப் பதிவு செய்ய வீடியோ கேமராமேன் ஒருவரையும் அவர்கள் உடன் அழைத்துச் சென்றனர்.

nirmaladevi investigation officer santhanam - 2025

முன்னதாக, இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகத் தேடப்பட்டு கைதான பேராசிரியர் முருகனை 5 நாட்கள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது. இந்நிலையில், சிறையில் உள்ள நிர்மலா தேவியிடம் சந்தானம் குழு இன்று விசாரணை நடத்திவருகிறது.

முன்னதாக, பேராசிரியை நிர்மலா தேவியிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் கைதானார். அவரை 5 நாட்கள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு சாத்தூர் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. விருதுநகரில் கிளைச்சிறையில் இருந்து பேராசிரியர் முருகனை அழைத்துச் சென்ற சி.பி.சி.ஐ.டி போலீசார், அவர்களின் அலுவலகத்தில் வைத்து நேற்றிரவு முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில், பேராசிரியர் முருகனின் நண்பர் தங்கபாண்டியன், காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குநர் விஜயதுரை ஆகியோரிடமும் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.

இதனிடையே, தலைமறைவாக இருந்த காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். அவரையும் காவலில் எடுக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாத்தூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இதனிடையே, மூன்று மாதங்களுக்கு முன்னர் தங்களிடம் செல்போனில் பேசிய நிர்மலா தேவி, தங்களையும் தவறான பாதைக்கு அழைத்ததாக, மேலும் இரு மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்களின் சார்பில், விசாரணை அதிகாரி சந்தானத்திடம் புகார் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.

நிர்மலா தேவிக்கான போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து, அவரை வரும் மே 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories