மெரினாவில் அய்யாக்கண்ணு போராட்டம்: ஒரு நாள் மட்டும் அனுமதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

Madras High Court in Chennai - 2026

சென்னை: மெரினாவில் ஒரு நாள் மட்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்த பின்னர், அது வன்முறையில் முடிந்ததால் சென்னை மெரினா கடற்கரை, போராட்டம் நடத்தத் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப் பட்டது. போராட்ட பதட்டம் நிலவும் போதெல்லாம், மெரினாவில் போலீஸார் குவிக்கப்பட்டு, போக்குவரத்து தடை செய்யப்படும். தடையை மீறி யாராவது போராட்டம் நடத்தினால், அவர்களை போலீஸார் கைதுசெய்து வந்தனர்.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை மோடியும் மத்திய அரசும் உடனடியாக அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சென்னை மெரினாவில் 90 நாள்கள் உண்ணாவிரம் இருக்க அனுமதி கேட்டு, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் மீதான விசாரணையின் போது, மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க இயலாது, அது கொள்கை ரீதியான முடிவு என்று போலீஸார் கூறினர். மேலும், மெரினாவை அடுத்த சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை உள்ளிட்ட சில பகுதிகளில் போராட்டம் நடத்த அரசு ஒதுக்கியிருப்பதாகவும், அங்கே போராட்டம் நடத்திக் கொள்ள அய்யாக்கண்ணுவுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அல்லது காவிரி நீர் தமிழகத்துக்கு வருவது என்பதை விட, மெரினாவில் போராட்டம் மற்றும் மோடிக்கு எதிரான பிரசாரம் என்பதில் மட்டுமே குறியாக இருக்கும் அய்யாக்கண்ணு, விடாப்பிடியாக மெரினாவில் தான் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் பட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் கூறினார்.

இந் நிலையில், மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க அய்யாக்கண்ணுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதுவும், 90 நாட்களுக்கெல்லாம் அனுமதிக்க இயலாது என்று கூறி, ஒரு நாள் மட்டும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனறும், எழுத்துரிமை, பேச்சுரிமையை வெளிப்படுத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories