சூட்டைத் தணிக்க அடுத்த 24 மணி நேரத்தில் மழை: எங்கெல்லாம் தெரியுமா?

Published:

raining 1 - 2026

சென்னை: அடுத்த 24 மணிநேரத்தில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அது தெரிவித்துள்ளது.

உள் தமிழகத்தில் பலத்த காற்று, இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

அதே போல் திருச்சி,சேலம், திண்டுக்கல், தேனி, வேலூர், திருநெல்வேலி, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட உள் தமிழக மாவட்டங்களில் பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கையில் 13 சென்டி மீட்டரும், கோவை பீளமேட்டில் 4 சென்டி மீட்டரும், மழை பதிவாகி உள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறியுள்ளது வானிலை ஆய்வு மையம்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

கோடை வெயிலின் உச்சமாகக் கருதப்படும் அக்னி நட்சத்திர வெயில் நாளை முதல் துவங்க உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை. இதனால் வேலைக்கு செல்வோர், சாலையில் பயணிப்போர் என அனைத்து தரப்பினருமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் மழை அறிவிப்பு மக்களுக்கு சிறிது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img