சென்னை: 10, +2 தேர்வு முடிவுகளை தொலைக்காட்சி, நாளிதழில் வெளியிட தடை கோரி மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க பள்ளிகளிலேயே 10, +2 தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று சென்னையில் செந்தில் குமார் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் புதன் கிழமை விசாரணைக்கு வருகிறது.
இந்த மனுவில் தொலைக்காட்சி, நாளிதழ் மூலம் தேர்வு முடிவுகள் வெளியிடுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. 10,+2 தேர்வு முடிவுகளை அந்தந்த பள்ளிகளுக்கு அரசு தேர்வுதுறை அனுப்பிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்து.