நிர்மலா தேவி விவகாரம்: சந்தானம் குழு அறிக்கையை வெளியிட தடை

Published:

nirmala devi1 - 2026
மதுரை: அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளை தவறான வழியில் செல்ல வைக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரித்து வரும் சந்தானம் குழு அறிக்கையை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி ஜாமீன் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.
இந்நிலையில் நிர்மலாதேவி விவகாரத்தில்  விசாரணை நடத்திய சந்தானம் குழு மே 15ஆம் தேதி அறிக்கை தர உள்ளதாகத்  தெரிவித்த நிலையில், கணேசன் என்பவர் சந்தானம் குழு அறிக்கையை வெளியிடத்  தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்   நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம்  குழு அறிக்கை  வெளியிட தடை விதித்தது.
நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தாலும் அதனை வெளியிட பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தருக்கு தடை விதித்து உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.
ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img