December 5, 2025, 2:53 PM
26.9 C
Chennai

டாஸ்மாக்கை கண்டித்து தற்கொலை செய்த தினேஷ் பிளஸ்-2வில் எடுத்த மார்க் என்ன தெரியுமா?

suicide student - 2025

நேற்று பிளஸ் டூ முடிவுகள் வெளியாயின. இதில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் குறித்த விவரங்கள் பல வெளியாயின. அதிர்ச்சிகளும் துக்கங்களும் சந்தோஷங்களும் பகிரப்பட்டாலும், பல்வேறு கனவுகளுடன் வாழ்க்கையைக் கொண்டு செல்ல நினைத்து, அண்மையில் தன் தந்தையின் குடிப்பழக்கத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நெல்லை மாவட்ட மாணவன் தினேஷ் எடுத்த மதிப்பெண்கள் அவரது குடும்பத்தாரை மட்டுமல்ல, பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கே.ரெட்டியபட்டி மாடசாமியின் மகன் தினேஷ். குடிப்பழக்கத்துக்கு அடிமையான கூலித் தொழிலாளி மாடசாமி. அவரது மகன் தினேஷ் நல்லசிவன், நாமக்கல் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ தேர்வு எழுதி முடித்துவிட்டு, நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். தந்தையின் குடிப் பழக்கத்தால் படிக்க இயலாமல் மன உளைச்சலில் இருந்த தினேஷ், அவரை திருத்த இயலாத நிலையில் கடந்த 2-ம் தேதி நெல்லை வண்ணாரப்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அதற்கு முன் தனது தந்தைக்கு எழுதிய கடிதத்தில், நான் இறந்த பிறகாவது நீ குடிக்காமல் இரு என்று கூறியிருந்தான். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மாணவன் தினேஷ் மரணம், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக இளைஞர்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியிலும், மன உளைச்சலுக்கு நடுவிலும் படித்து, பிளஸ்-டூ தேர்வில் மாணவன் தினேஷ் நல்லசிவன் எடுத்துள்ள மார்க், அவரது குடும்பத்தாரை மட்டுமல்ல, பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. மொத்தம் 1024 மார்க் எடுத்துள்ள தினேஷ், தமிழ்- 194,  ஆங்கிலம்-148, இயற்பியல்-186, வேதியியல்- 173, உயிரியல்-129, கணிதம் -194 என மதிப்பெண் பெற்றுள்ளார்.

நன்றாகப் படிக்கக் கூடிய தினேஷ், நீட் தேர்வை சிறப்பாக எழுதி டாக்டராக வேண்டும் என்பது எங்கள் விருப்பமாக இருந்தது என்று கூறும் அவரது மாமா சங்கரலிங்கம், அவனது மதிப்பெண் விவரத்தைப் பார்த்து குடும்பத்தினர் அனைவருமே மிகுந்த சோகமடைந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories