பேஸ்புக்கில் காதல்…கோவிலில் கல்யாணம்… பதுங்கியது காவல் நிலையத்தில்!

temple marriage - 2026

பேஸ்புக்கில் காதலித்து, பெற்றோரை எதிர்த்து கல்யாணமும் செய்து கொண்டு, பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடையும் ஜோடிகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது.

குடியாத்தம் அருகே ‘பேஸ்புக்’கில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நான்கு காதல் ஜோடிகள் காவல் நிலையத்தில்  தஞ்சமடைந்தன. அவர்களில் ஒருவர் கல்லூரி மாணவி. வேலுார் மாவட்டம் குடியாத்தம் நெல்லுார்பேட்டையைச் சேர்ந்தவர் நந்தினி என்ற மாணவி. 20 வயதாகும் அவர், அங்குள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவருக்கும் ஆந்திர மாநிலம் நெல்லுாரைச் சேர்ந்த 22 வயதான சுமன் என்பவருக்கும் பேஸ்புக் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சுமன் அங்குள்ள மளிகைக் கடையில் வேலை செய்து வருகிறார். சுமார்  15 நாட்கள் இருவரும் ‘பேஸ்புக்’கில் அறிமுகமாகி பேசி, தொடர்ந்து காதலித்து வந்தனராம். இவர்களது காதலை அறிந்த இருவரது பெற்றோரும் இந்தக் காதலைக் கண்டித்துள்ளனர்.  ஆனால், அவர்களது கண்டிப்பைப் புறந்தள்ளிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி கடந்த 15 ஆம் தேதி குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் வைத்து, கல்யாணம் செய்து கொண்டதாம்.  பின்னர் இருவரும் தங்களுக்கு பாதுகாப்பு கோரி, குடியாத்தம் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இப்படி, பேஸ்புக் மூலம் பழகி காதலித்து திருமணம் செய்து கொண்ட மேலும் மூன்று ஜோடிகள் குடியாத்தம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.  குடியாத்தம் சேதுக்கரையைச் சேர்ந்த ஆர்த்தி (20), பிரகாஷ்(22) என்ற ஜோடி, மாச்சனுாரைச் சேர்ந்த குமரேசன் (25) பவித்ரா(20), நாட்றம்பள்ளியைச் சேர்ந்த கோகிலா (20) விஜயன்(22) ஆகிய ஜோடிகள் பேஸ்புக் மூலம் காதலித்து வீட்டை விட்டு வெளியேறி கல்யாணம் செய்து கொண்டு குடியாத்தம் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனராம். இவர்கள் குறித்து சம்பந்தப்பட்ட நபர்களின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து, குடியாத்தம் மகளிர் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனராம்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

பேஸ்புக் என்பது தனிப்பட்ட எண்ணங்களைப் பரிமாறும் ஒரு தொடர்பு சாதனமாக முதலில் தொடங்கி, அரசியல் ரீதியாக கருத்துரு உருவாக்கும் தளமாகவும், வணிக ரீதியில் பயன்படுத்தும் தளமாகவும், இது போல் காதல் உள்ளிட்டவற்றை வளர்க்கும் கல்யாணத் தரகுத் தளமாகவும் மாறிவிட்டுள்ளது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories