February 20, 2026, 9:45 AM
25.9 C
Chennai

பேஸ்புக்கில் காதல்…கோவிலில் கல்யாணம்… பதுங்கியது காவல் நிலையத்தில்!

temple marriage - 2026

பேஸ்புக்கில் காதலித்து, பெற்றோரை எதிர்த்து கல்யாணமும் செய்து கொண்டு, பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடையும் ஜோடிகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது.

குடியாத்தம் அருகே ‘பேஸ்புக்’கில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நான்கு காதல் ஜோடிகள் காவல் நிலையத்தில்  தஞ்சமடைந்தன. அவர்களில் ஒருவர் கல்லூரி மாணவி. வேலுார் மாவட்டம் குடியாத்தம் நெல்லுார்பேட்டையைச் சேர்ந்தவர் நந்தினி என்ற மாணவி. 20 வயதாகும் அவர், அங்குள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவருக்கும் ஆந்திர மாநிலம் நெல்லுாரைச் சேர்ந்த 22 வயதான சுமன் என்பவருக்கும் பேஸ்புக் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சுமன் அங்குள்ள மளிகைக் கடையில் வேலை செய்து வருகிறார். சுமார்  15 நாட்கள் இருவரும் ‘பேஸ்புக்’கில் அறிமுகமாகி பேசி, தொடர்ந்து காதலித்து வந்தனராம். இவர்களது காதலை அறிந்த இருவரது பெற்றோரும் இந்தக் காதலைக் கண்டித்துள்ளனர்.  ஆனால், அவர்களது கண்டிப்பைப் புறந்தள்ளிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி கடந்த 15 ஆம் தேதி குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் வைத்து, கல்யாணம் செய்து கொண்டதாம்.  பின்னர் இருவரும் தங்களுக்கு பாதுகாப்பு கோரி, குடியாத்தம் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இப்படி, பேஸ்புக் மூலம் பழகி காதலித்து திருமணம் செய்து கொண்ட மேலும் மூன்று ஜோடிகள் குடியாத்தம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.  குடியாத்தம் சேதுக்கரையைச் சேர்ந்த ஆர்த்தி (20), பிரகாஷ்(22) என்ற ஜோடி, மாச்சனுாரைச் சேர்ந்த குமரேசன் (25) பவித்ரா(20), நாட்றம்பள்ளியைச் சேர்ந்த கோகிலா (20) விஜயன்(22) ஆகிய ஜோடிகள் பேஸ்புக் மூலம் காதலித்து வீட்டை விட்டு வெளியேறி கல்யாணம் செய்து கொண்டு குடியாத்தம் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனராம். இவர்கள் குறித்து சம்பந்தப்பட்ட நபர்களின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து, குடியாத்தம் மகளிர் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனராம்.

பேஸ்புக் என்பது தனிப்பட்ட எண்ணங்களைப் பரிமாறும் ஒரு தொடர்பு சாதனமாக முதலில் தொடங்கி, அரசியல் ரீதியாக கருத்துரு உருவாக்கும் தளமாகவும், வணிக ரீதியில் பயன்படுத்தும் தளமாகவும், இது போல் காதல் உள்ளிட்டவற்றை வளர்க்கும் கல்யாணத் தரகுத் தளமாகவும் மாறிவிட்டுள்ளது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories