நடிகை மேகன் மார்க்லேவுடன் கோலாகலமாய் நடைபெற்ற பிரிட்டன் இளவரசர் ஹாரியின் திருமணம்!

england harry megan marriage - 2026
பிரிட்டன் இளவரசர் ஹாரி அமெரிக்க நடிகை மேகன் மார்க்லேவை மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டார். விண்ட்சர் அரண்மனையில் உள்ள தேவாலயத்தில் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

வேல்ஸ் இளவரசர் சார்லஸ் – டயானா தம்பதியின் மகன் ஹாரியும், அமெரிக்க நடிகை மேகன் மார்க்லேவும் நீண்ட நாள்களாக காதலித்து வருகின்றனர். இவர்களது திருமணத்துக்காக அரச குடும்பத்தினர், பொதுமக்கள் என 2,640 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.

 

இந்நிலையில் சனிக்கிழமை முற்பகல் 11 மணி அளவில் அரண்மனைக்கு விருந்தினர்கள் வர, திருமணத்துக்காக அரண்மனையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப் பட்டன. இசை நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியின் அலையை விருந்தினர்களுக்கும் மணமக்களுக்கும் ஏற்படுத்தியது. பிரிட்டன் அரச குடும்பத்தில் நடைபெறும் இந்த பிரமாண்ட திருமண நிகழ்வைக் காண பிரிட்டனிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் ரசிகர்கள் முந்தைய நாள் இரவே சாலைகளில் காத்திருந்தனர்.

இத்தனை பேர் இருந்தாலும், அரச குடும்பத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் 600 பேருக்கு மட்டுமே தேவாலயத்துள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. மற்றவர்கள் வெளியே இருந்தபடி, திருமண வைபவத்தைக் கண்டு களித்தனர். திருமண நிகழ்வுக்கு சற்று முன்னர் மணமகன் ஹாரி தமது சகோதரர் வில்லியமுடன் ராணுவ சீருடையில் வந்தார். இதைத் தொடர்ந்து மணமகள் மேகன் மார்க்லே, தமது தாய் டோரியா ராக்லாண்டுடன் பழமையான ரோல்ஸ் ராய்ஸ் காரில் அரண்மனைக்கு வந்தார்.

மணமகள் மேகனின் தந்தை தாமஸ் மாக்லே, இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதால், மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அதனால் அவரால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை.

மணமகளுக்கு உரிய வெள்ளை கவுன் அணிந்து தேவாலயத்துக்குள் வந்தார் மேகன் மார்க்லே. அவரை, இளவரசர் ஹாரியின் தந்தை சார்லஸ் கரம் பிடித்து வரவேற்று ஹாரியின் கரங்களில் ஒப்படைத்தார். பின்னர் இருவரும் உறுதிமொழி ஏற்றனர்.

முன்னதாக, மணப்பெண் தோழியர் ஆறு பேருடன், இளவரசர் வில்லியம்ஸின் குழந்தைகள் பிரின்ஸ் ஜார்ஜ், பிரின்ஸ் சார்லோட்டே உள்ளிட்ட நான்கு குழந்தைகள் ‘பேஜ்பாய்ஸ்’ ஆகப் பின் தொடர்ந்தனர். தொடர்ந்து அவர்கள் மேகன் மார்க்லேவை கோட்டைக்குள் அழைத்துச் சென்றனர். தாய் டோரியா ராக்லாண்டுடன், மேகன் மார்க்லே செயின்ட்.ஜார்ஜ் சர்ச்சின் நடுக்கூடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவர், இங்கிலாந்து ராணி தனக்கு பரிசளித்த விலையுயர்ந்த வில்ஷே தங்கம் கொண்ட மோதிரத்தை அணிந்திருந்தார். இளவரசர் ஹாரி ஒரு பிளாட்டின மோதிரத்தை அணிந்தார். தொடர்ந்து திருமண அடையாளமாக மோதிரம் மாற்றிக் கொண்டனர்.

இந்தத் திருமண விழாவில் பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா, டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், பிரபல அமெரிக்க தொகுப்பாளர் ஒப்ரா வின்ஃபரே, ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி, பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்கம் உள்ளிட்ட 600 விருந்தினர்கள் கலந்து கொண்டு திருமண தம்பதியை வாழ்த்தினர்.

2,000க்கும் மேற்பட்டோர், வின்ட்சார் கோட்டையில் கீழ்த் தளத்திலிருந்து இந்த நிகழ்வைக் காண அனுமதிக்கப்பட்டனர். இங்கிலாந்து மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இந்த நிகழ்வு நேரலையாக தொலைக்காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பப் பட்டது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories