ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

Published:

IMG 20180522 175731 e1527004493820 - 2026

சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் இன்று கலவரம் கட்டுக்கடங்காமல் சென்றது. தூத்துக்குடி பனிமய மாதா சர்ச்சில் இருந்து வெளியேறி வந்த போராட்டக்காரர்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்குள் சென்று வன்முறையில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீஸார் போராட்டக்காரர்களைக் கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தினர்.  இதில் 10 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக இன்று அரசு வெளியிட்டுள்ள செய்தியில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்ககப்படும்.

பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட ஆவன செய்யப் படும். துப்பாக்கிச்சூடு சமப்வம் குறித்து ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும்… என்று தெரிவிக்கப் பட்டது.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img