நெல்லை, குமரியில் இணையத்துக்கு மீண்டும் உயிர் வந்தது!

Published:

IMG 20180522 WA0059 - 2026

தூத்துக்குடி கலவரத்தால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் மேலும் வன்முறைகள் தலையெடுக்கா வண்ணம் காக்க, துண்டிக்கப் பட்டிருந்த இணைய சேவை, நெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும்  வழங்கப்படும் என தமிழக அரசு கூறியதை அடுத்து, இன்று மாலை முதல் மீண்டும் தொடங்கியது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், கலவரத்தில் பாதிக்கப்படாத குமரி, நெல்லையில் இணைய சேவை முடக்கம் குறித்து விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை வழங்கப் படும் எனவும், இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் இணைய சேவை முடக்கம் தொடரும் என விளக்கம் அளிக்கப் பட்டது.  இதைத் தொடர்ந்து, இன்று மாலை முதல் நெல்லை, குமரி மாவட்டங்களில் இணையத்துக்கு உயிர் கிடைத்துள்ளது.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img