December 5, 2025, 5:12 PM
27.9 C
Chennai

எடப்பாடியை அகற்ற என்னல்லாமோ செய்து பார்க்கும் ஸ்டாலின்… லேட்டஸ்ட் போராட்டம் இதுதான்!

stalin - 2025

அதிமுக.,வை பதவி விலக்கும் தொடர் போராட்டத்தில் சற்றும் மனம் தளராத திமுக.,வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இப்போது தமது அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளார். அந்தப் போராட்டம், ஸ்டாலினின் உள்நோக்கம் என்ன என்பதையும், எதற்காக இத்தனை போராட்டங்களை திமுக நடத்துகின்றது என்பதையும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

முதலமைச்சர் பதவி விலகும் வரை பேரவை நிகழ்வுகளில் திமுக பங்கேற்காது என்று, இன்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள அந்த அறிவிப்புதான், ஸ்டாலினின் உள்நோக்கம் என்ன என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. முதலமைச்சர் பதவி விலக வலியுறுத்தி தலைமைச் செயலக வளாகத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் முழக்கம் எழுப்பினர்.

இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள திமுக, முதலமைச்சர் பதவி விலகும் வரை அவை நடவடிக்கைகளில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளது இந்தப் பின்னணியை எடுத்துக் காட்டியுள்ளது.

தூத்துக்குடி நிகழ்வுகள் தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர திமுக.,வினருக்கு அனுமதி மறுத்தார் அவைத்தலைவர் தனபால். ஆனால், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மான அடிப்படையில் பேச அனுமதித்தார்.

அப்போது பேசிய ஸ்டாலின், தூத்துக்குடியில் சீருடை இல்லாமல் காவலர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர் என்றும், எஸ்எல்ஆர் என்ற எந்திர துப்பாக்கி அங்கு பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், முதலமைச்சரின் விளக்க அறிக்கையில் துப்பாக்கிச் சூடு என்ற வார்த்தையே இடம்பெறவில்லை எனக் கூறிய ஸ்டாலின், போராட்டத்தில் சமூக விரோதிகள் ஈடுபட்டனர் என செய்தியாளர் சந்திப்பின்போது முதலமைச்சர் கூறியது கொச்சைப் படுத்துவதாக உள்ளது என்றார்.

ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து, மாநில உளவுத்துறை தமிழக அரசுக்கு அளித்த அறிக்கையை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்; ஆலையை மூடுவதாக அறிவித்திருப்பது வெறும் கண்துடைப்பு; இந்த அரசாணையை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா? என கேள்வி எழுப்பினார் மு.க.ஸ்டாலின்!

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டை தொடர்புபடுத்தி காவல்துறை அதிகாரிகள் குறித்து மு.க.ஸ்டாலின் கூறியது முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதையடுத்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories