எடப்பாடியை அகற்ற என்னல்லாமோ செய்து பார்க்கும் ஸ்டாலின்… லேட்டஸ்ட் போராட்டம் இதுதான்!

stalin - 2026

அதிமுக.,வை பதவி விலக்கும் தொடர் போராட்டத்தில் சற்றும் மனம் தளராத திமுக.,வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இப்போது தமது அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளார். அந்தப் போராட்டம், ஸ்டாலினின் உள்நோக்கம் என்ன என்பதையும், எதற்காக இத்தனை போராட்டங்களை திமுக நடத்துகின்றது என்பதையும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

முதலமைச்சர் பதவி விலகும் வரை பேரவை நிகழ்வுகளில் திமுக பங்கேற்காது என்று, இன்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள அந்த அறிவிப்புதான், ஸ்டாலினின் உள்நோக்கம் என்ன என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. முதலமைச்சர் பதவி விலக வலியுறுத்தி தலைமைச் செயலக வளாகத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் முழக்கம் எழுப்பினர்.

இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள திமுக, முதலமைச்சர் பதவி விலகும் வரை அவை நடவடிக்கைகளில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளது இந்தப் பின்னணியை எடுத்துக் காட்டியுள்ளது.

தூத்துக்குடி நிகழ்வுகள் தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர திமுக.,வினருக்கு அனுமதி மறுத்தார் அவைத்தலைவர் தனபால். ஆனால், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மான அடிப்படையில் பேச அனுமதித்தார்.

அப்போது பேசிய ஸ்டாலின், தூத்துக்குடியில் சீருடை இல்லாமல் காவலர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர் என்றும், எஸ்எல்ஆர் என்ற எந்திர துப்பாக்கி அங்கு பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், முதலமைச்சரின் விளக்க அறிக்கையில் துப்பாக்கிச் சூடு என்ற வார்த்தையே இடம்பெறவில்லை எனக் கூறிய ஸ்டாலின், போராட்டத்தில் சமூக விரோதிகள் ஈடுபட்டனர் என செய்தியாளர் சந்திப்பின்போது முதலமைச்சர் கூறியது கொச்சைப் படுத்துவதாக உள்ளது என்றார்.

ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து, மாநில உளவுத்துறை தமிழக அரசுக்கு அளித்த அறிக்கையை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்; ஆலையை மூடுவதாக அறிவித்திருப்பது வெறும் கண்துடைப்பு; இந்த அரசாணையை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா? என கேள்வி எழுப்பினார் மு.க.ஸ்டாலின்!

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டை தொடர்புபடுத்தி காவல்துறை அதிகாரிகள் குறித்து மு.க.ஸ்டாலின் கூறியது முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதையடுத்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories