எடப்பாடியை அகற்ற என்னல்லாமோ செய்து பார்க்கும் ஸ்டாலின்… லேட்டஸ்ட் போராட்டம் இதுதான்!

stalin - 2026

அதிமுக.,வை பதவி விலக்கும் தொடர் போராட்டத்தில் சற்றும் மனம் தளராத திமுக.,வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இப்போது தமது அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளார். அந்தப் போராட்டம், ஸ்டாலினின் உள்நோக்கம் என்ன என்பதையும், எதற்காக இத்தனை போராட்டங்களை திமுக நடத்துகின்றது என்பதையும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

முதலமைச்சர் பதவி விலகும் வரை பேரவை நிகழ்வுகளில் திமுக பங்கேற்காது என்று, இன்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள அந்த அறிவிப்புதான், ஸ்டாலினின் உள்நோக்கம் என்ன என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. முதலமைச்சர் பதவி விலக வலியுறுத்தி தலைமைச் செயலக வளாகத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் முழக்கம் எழுப்பினர்.

இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள திமுக, முதலமைச்சர் பதவி விலகும் வரை அவை நடவடிக்கைகளில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளது இந்தப் பின்னணியை எடுத்துக் காட்டியுள்ளது.

தூத்துக்குடி நிகழ்வுகள் தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர திமுக.,வினருக்கு அனுமதி மறுத்தார் அவைத்தலைவர் தனபால். ஆனால், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மான அடிப்படையில் பேச அனுமதித்தார்.

ALSO READ:  ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அப்போது பேசிய ஸ்டாலின், தூத்துக்குடியில் சீருடை இல்லாமல் காவலர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர் என்றும், எஸ்எல்ஆர் என்ற எந்திர துப்பாக்கி அங்கு பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், முதலமைச்சரின் விளக்க அறிக்கையில் துப்பாக்கிச் சூடு என்ற வார்த்தையே இடம்பெறவில்லை எனக் கூறிய ஸ்டாலின், போராட்டத்தில் சமூக விரோதிகள் ஈடுபட்டனர் என செய்தியாளர் சந்திப்பின்போது முதலமைச்சர் கூறியது கொச்சைப் படுத்துவதாக உள்ளது என்றார்.

ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து, மாநில உளவுத்துறை தமிழக அரசுக்கு அளித்த அறிக்கையை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்; ஆலையை மூடுவதாக அறிவித்திருப்பது வெறும் கண்துடைப்பு; இந்த அரசாணையை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா? என கேள்வி எழுப்பினார் மு.க.ஸ்டாலின்!

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டை தொடர்புபடுத்தி காவல்துறை அதிகாரிகள் குறித்து மு.க.ஸ்டாலின் கூறியது முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதையடுத்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories