எடப்பாடியை அகற்ற என்னல்லாமோ செய்து பார்க்கும் ஸ்டாலின்… லேட்டஸ்ட் போராட்டம் இதுதான்!

stalin - 2026

அதிமுக.,வை பதவி விலக்கும் தொடர் போராட்டத்தில் சற்றும் மனம் தளராத திமுக.,வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இப்போது தமது அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளார். அந்தப் போராட்டம், ஸ்டாலினின் உள்நோக்கம் என்ன என்பதையும், எதற்காக இத்தனை போராட்டங்களை திமுக நடத்துகின்றது என்பதையும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

முதலமைச்சர் பதவி விலகும் வரை பேரவை நிகழ்வுகளில் திமுக பங்கேற்காது என்று, இன்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள அந்த அறிவிப்புதான், ஸ்டாலினின் உள்நோக்கம் என்ன என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. முதலமைச்சர் பதவி விலக வலியுறுத்தி தலைமைச் செயலக வளாகத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் முழக்கம் எழுப்பினர்.

இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள திமுக, முதலமைச்சர் பதவி விலகும் வரை அவை நடவடிக்கைகளில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளது இந்தப் பின்னணியை எடுத்துக் காட்டியுள்ளது.

தூத்துக்குடி நிகழ்வுகள் தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர திமுக.,வினருக்கு அனுமதி மறுத்தார் அவைத்தலைவர் தனபால். ஆனால், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மான அடிப்படையில் பேச அனுமதித்தார்.

அப்போது பேசிய ஸ்டாலின், தூத்துக்குடியில் சீருடை இல்லாமல் காவலர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர் என்றும், எஸ்எல்ஆர் என்ற எந்திர துப்பாக்கி அங்கு பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், முதலமைச்சரின் விளக்க அறிக்கையில் துப்பாக்கிச் சூடு என்ற வார்த்தையே இடம்பெறவில்லை எனக் கூறிய ஸ்டாலின், போராட்டத்தில் சமூக விரோதிகள் ஈடுபட்டனர் என செய்தியாளர் சந்திப்பின்போது முதலமைச்சர் கூறியது கொச்சைப் படுத்துவதாக உள்ளது என்றார்.

ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து, மாநில உளவுத்துறை தமிழக அரசுக்கு அளித்த அறிக்கையை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்; ஆலையை மூடுவதாக அறிவித்திருப்பது வெறும் கண்துடைப்பு; இந்த அரசாணையை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா? என கேள்வி எழுப்பினார் மு.க.ஸ்டாலின்!

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டை தொடர்புபடுத்தி காவல்துறை அதிகாரிகள் குறித்து மு.க.ஸ்டாலின் கூறியது முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதையடுத்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories