December 5, 2025, 9:20 PM
26.6 C
Chennai

ஜீ தமிழ் டி.வி.யின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி ஒளிபரப்பை நிறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

solvathellamunmai - 2025

மதுரை: ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி, சொல்வதெல்லாம் உண்மை! இந்த நிகழ்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி, சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி. ஜீ தமிழ் டிவி.,யில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் நேயர்கள், சாதாரண ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் குடும்பப் பிரச்னைகள் குறித்த விஷயங்கள் அலசப் படுகின்றது. இதற்காக பிரச்னை நிலவும் இரு தரப்பினரையும் நேரடியாக அழைத்து அமர வைத்து, விவாதம் நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கேமராவில் பதிவு செய்யப்படவில்லை என்று கூறி, சாதாரணமாக பேசும் விஷயங்களை பதிவு செய்து, பின்னர் அவற்றையே நிகழ்ச்சியில் ஒளிபரப்பி விடுகின்றனர் என்று குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. மேலும், குடும்ப விஷயங்களை பொதுவில் அலசுவதுபோல இருந்தாலும், இதனால் தனிமனித வாழ்க்கை பாதிக்கப்படுவதாக பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சி குறித்து விருதுநகரைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். அதில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தனி மனித உரிமையில் தலையிடுவதாக உள்ளது என்றும், அந்த நிகழ்ச்சியினை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜீ தமிழ் டி.வியில் வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories