ஜீ தமிழ் டி.வி.யின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி ஒளிபரப்பை நிறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

solvathellamunmai - 2026

மதுரை: ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி, சொல்வதெல்லாம் உண்மை! இந்த நிகழ்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி, சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி. ஜீ தமிழ் டிவி.,யில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் நேயர்கள், சாதாரண ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் குடும்பப் பிரச்னைகள் குறித்த விஷயங்கள் அலசப் படுகின்றது. இதற்காக பிரச்னை நிலவும் இரு தரப்பினரையும் நேரடியாக அழைத்து அமர வைத்து, விவாதம் நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கேமராவில் பதிவு செய்யப்படவில்லை என்று கூறி, சாதாரணமாக பேசும் விஷயங்களை பதிவு செய்து, பின்னர் அவற்றையே நிகழ்ச்சியில் ஒளிபரப்பி விடுகின்றனர் என்று குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. மேலும், குடும்ப விஷயங்களை பொதுவில் அலசுவதுபோல இருந்தாலும், இதனால் தனிமனித வாழ்க்கை பாதிக்கப்படுவதாக பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சி குறித்து விருதுநகரைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். அதில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தனி மனித உரிமையில் தலையிடுவதாக உள்ளது என்றும், அந்த நிகழ்ச்சியினை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜீ தமிழ் டி.வியில் வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories