ஜல்லிக்கட்டு நாயகன்னு புகழாதீங்க! காளைய அடக்குன்னாய்ங்கன்னா திண்டாட்டமாயிடும்! : ஓபிஎஸ் காமெடி!

Published:

panneerselvam tn - 2026

சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காமெடி நாயகனாக ஜொலித்தார். ”என்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று கூறுவதைத் தவிர்க்க வேண்டும், காளையை அடக்குங்கள் என்று சொன்னால் என்பாடு திண்டாட்டமாகிவிடும்” என்று கூறி, சபையில் சிரிப்பலையை சிதறவிட்டார் துணை முதல்வர் ஓபிஎஸ்.

ஜல்லிக்கட்டு நாயகன் என தம்மை அழைக்க வேண்டாம் எனக் கூறிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நான்கு தலை பிரம்மா போல, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செயல்படுவதாக புகழாரம் சூட்டியுள்ளார்.

சட்டப் பேரவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துப் பேசினார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அப்போது அவர், தமிழகத்தில் பல இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்க்க தாம் செல்வதாகக் கூறினார்.

யாராவது ஜல்லிக்கட்டு நாயகன் வந்துள்ளார், அவர் காளையை அடக்க வேண்டும் என்று என்னைப் பார்த்துக் கூறிவிட்டால், என் பாடு திண்டாட்டம் ஆகிவிடும் என நகைச்சுவையாகக் கூறினார். இதனால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

உள்ளாட்சித்துறை குறித்த திமுக உறுப்பினர் தாமோ. அன்பரசன் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய அவர், தலையில்லாத உடலாக உள்ளாட்சித்துறை செயல்படவில்லை; நான்கு தலைகள் கொண்ட பிரம்மா போல எஸ்.பி.வேலுமணி சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று கூறி சிரிப்பலையை மேலும் அதிகரிக்கச் செய்தார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img