அரசுப்பள்ளியில் சேர கட்டாய நன்கொடை வசூல் அதிர்ச்சியில் பெற்றோர்

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரத்தில் த.பி. சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
உள்ளது இந்தப்பள்ளியில் 11ம் வகுப்பு சேர்க்கைக்கு வந்த மாணவர்களிடம் கட்டாய நன்கொடை வசூலை பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கலெக்டர் உத்தரவின் பேரில் வசூலித்த பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
school - 2026
பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாவூர்சத்திரம், கீழப்பாவூர்,கல்லூரணி, திப்பணம்பட்டி, குறும்பலாப்பேரி, , மகிழ்வண்ணநாதபுரம், பெத்தநாடார்பட்டி, சாலைப்புதூர் கருமடையூர், மூலக்கரையூர், செல்வவிநாயகபுரம், சிவநாடானூர், ராமச்சந்திரப்பட்டிணம், உள்ளிட்ட பல பகுதியிலிருந்து சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில் இவ்வாண்டு 11ம் வகுப்பு சேர்க்கைக்கு சேரும் மாணவர்களிடம் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சில ஆசிரியர்கள் சேர்ந்து ரூ.1000 முதல் 3500 வரை கட்டாய நன்கொடை என சுமார் 1.50 லட்சம் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். புகாரை பெற்று கொண்ட கலெக்டர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
இதனையடுத்து தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் ஷாஜகான் மற்றும் கல்வி அதிகாரிகள் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று முன்தினம் ஆய்வு நேற்று முன்தினம் நடத்தினர். மேலும் ஆய்வுக்காக அதிகாரிகள் வந்த சமயம் பள்ளியில் சேர்க்கைக்கு வந்த ஒருமாணவனின் தந்தை சமந்தப்பட்ட அதிகாரியிடமே பணத்தை கொடுக்க புகார் ஊர்ஜிதம் ஆனது இதையெடுத்து 11ம் வகுப்பு சேர்க்கைக்கு மாணவர்களிடம் கட்டாய நன்கொடை வசூலித்தது தெரிய வந்தது. உடனடியாக நன்கொடை என வசூலித்த பணத்தை மாணவர்களிடம் திரும்ப ஒப்படைக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டதையடுத்து பணம் உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டது
மேலும் இனி வரும் காலங்களில் சேர்க்கைக்கு வரும் மாணவர்களிடம் கட்டாய நன்கொடை மற்றும் இதர கூடுதல் மறைமுக கட்டணங்கள் வசூலிக்கக்கூடாது என்று எடுத்துரைத்தனர்.மேலும் எதற்கு அரசுப்பள்ளியில் நன்கொடைவசூலித்ததார்கள் என்பது தான் பெற்றோர் மத்தியில் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது ,இதே நெல்லை மாவட்டத்தில் மாணவர்கள் பள்ளியில் சேர ஆசிரியர்கள் ,மிதிவண்டி,தங்ககாசு,அஞ்சலகசேமிப்புக் கணக்கு துவங்கி அதில் ரூ 1000 போட்டு ஊக்கப்படுத்தும் வேளையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியாக உள்ளது
நன்கொடை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மற்றும் தென்காசி கல்வி மாவட்ட கல்வி அலுவலரை பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories