அரசுப்பள்ளியில் சேர கட்டாய நன்கொடை வசூல் அதிர்ச்சியில் பெற்றோர்

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரத்தில் த.பி. சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
உள்ளது இந்தப்பள்ளியில் 11ம் வகுப்பு சேர்க்கைக்கு வந்த மாணவர்களிடம் கட்டாய நன்கொடை வசூலை பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கலெக்டர் உத்தரவின் பேரில் வசூலித்த பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
school - 2026
பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாவூர்சத்திரம், கீழப்பாவூர்,கல்லூரணி, திப்பணம்பட்டி, குறும்பலாப்பேரி, , மகிழ்வண்ணநாதபுரம், பெத்தநாடார்பட்டி, சாலைப்புதூர் கருமடையூர், மூலக்கரையூர், செல்வவிநாயகபுரம், சிவநாடானூர், ராமச்சந்திரப்பட்டிணம், உள்ளிட்ட பல பகுதியிலிருந்து சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில் இவ்வாண்டு 11ம் வகுப்பு சேர்க்கைக்கு சேரும் மாணவர்களிடம் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சில ஆசிரியர்கள் சேர்ந்து ரூ.1000 முதல் 3500 வரை கட்டாய நன்கொடை என சுமார் 1.50 லட்சம் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். புகாரை பெற்று கொண்ட கலெக்டர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
இதனையடுத்து தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் ஷாஜகான் மற்றும் கல்வி அதிகாரிகள் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று முன்தினம் ஆய்வு நேற்று முன்தினம் நடத்தினர். மேலும் ஆய்வுக்காக அதிகாரிகள் வந்த சமயம் பள்ளியில் சேர்க்கைக்கு வந்த ஒருமாணவனின் தந்தை சமந்தப்பட்ட அதிகாரியிடமே பணத்தை கொடுக்க புகார் ஊர்ஜிதம் ஆனது இதையெடுத்து 11ம் வகுப்பு சேர்க்கைக்கு மாணவர்களிடம் கட்டாய நன்கொடை வசூலித்தது தெரிய வந்தது. உடனடியாக நன்கொடை என வசூலித்த பணத்தை மாணவர்களிடம் திரும்ப ஒப்படைக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டதையடுத்து பணம் உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டது
மேலும் இனி வரும் காலங்களில் சேர்க்கைக்கு வரும் மாணவர்களிடம் கட்டாய நன்கொடை மற்றும் இதர கூடுதல் மறைமுக கட்டணங்கள் வசூலிக்கக்கூடாது என்று எடுத்துரைத்தனர்.மேலும் எதற்கு அரசுப்பள்ளியில் நன்கொடைவசூலித்ததார்கள் என்பது தான் பெற்றோர் மத்தியில் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது ,இதே நெல்லை மாவட்டத்தில் மாணவர்கள் பள்ளியில் சேர ஆசிரியர்கள் ,மிதிவண்டி,தங்ககாசு,அஞ்சலகசேமிப்புக் கணக்கு துவங்கி அதில் ரூ 1000 போட்டு ஊக்கப்படுத்தும் வேளையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியாக உள்ளது
நன்கொடை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மற்றும் தென்காசி கல்வி மாவட்ட கல்வி அலுவலரை பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories