அமைதியைக் குலைக்கும் தீயசக்திகளை அரசு ஒடுக்க வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை

05 June06 TN Goverment - 2026
தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் தீய சக்திகளை தமிழக அரசு ஒடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் சார்பில் காடேஸ்வரா சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கை:

கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடியில்  நடந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களை ரஜினி காந்த் சந்தித்தார். அதன் பின், பத்திரிகையாளர்கள் சந்திப்பில், ஒரு தேசியவாதியாக, கலவரங்களுக்கு பின்னணியில் இருந்தவர்கள் நக்சல் பயங்கரவாதிகள், சமூக விரோதிகள்  என்று  பகிரங்கமாக கூறினார்.

தூத்துக்குடி சம்பவம் பற்றி ரஜினிகாந்த் கூறிய கருத்தை இந்து முன்னணி பேரியக்கம் வரவேற்று, பாராட்டுத் தெரிவித்தது.

ரஜினிகாந்த்தின் இந்தக் கருத்தினைப் பொறுத்துக்கொள்ள இயலாத தேசவிரோத சக்திகள், சமூக விரோத அமைப்புகள், நாளை வெளியாகும் அவருடைய திரைப் படத்தை வெளிவராமல் தடுப்பதற்கான பல்வேறு முயற்சிகளை செய்வதாக தெரிகிறது.

கர்நாடகத்தில் தன்னுடைய காலா படம் வெளிவர வேண்டும் என்பதற்காக ரஜினிகாந்த் கன்னடர்களிடத்திலே மண்டியிட்டுவிட்டார் எனப் பொய்ப் பிரச்சாரங்களை, விஷமத்தனமாக திரித்து வெளியிட்டு வருகிறார்கள்

தேசியவாதியான ரஜினிகாந்த் அவர்களுக்கு மிரட்டல் விடுத்திருப்பதுடன், அவருடைய திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட போவதாக அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது.

தமிழக காவல்துறை, ரஜினிகாந்த் அவர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும், அதேபோல நாளை திரைப்படம் வெளிவரக் கூடிய நிலையில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வண்ணம் திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தேவை ஏற்பட்டால் இந்து முன்னணி தொண்டர்கள் நாளை வெளிவரும் காலா திரைப்பட வெளியீட்டிற்கு தக்க பாதுகாப்பு அளிப்பார்கள் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம் .

தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் போராட்டம் என மக்களை நிம்மதியாக வியாபாரமோ, தொழிலோ, பிரயாணமோ செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தி வருகின்றனர்.

மக்களிடம் தவறான செய்திகளை கொண்டு சென்று பதட்டத்தை ஏற்படுத்தும், சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் சமூக விரோதிகளை, தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என இந்து முன்னணிக் கேட்டுக்கொள்கிறது.

1 COMMENT

  1. இந்த கும்பலை ஒடுக்காமல் ஒழித்து விடவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories