February 20, 2026, 5:15 AM
24.5 C
Chennai

அமைதியைக் குலைக்கும் தீயசக்திகளை அரசு ஒடுக்க வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை

05 June06 TN Goverment - 2026
தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் தீய சக்திகளை தமிழக அரசு ஒடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் சார்பில் காடேஸ்வரா சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கை:

கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடியில்  நடந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களை ரஜினி காந்த் சந்தித்தார். அதன் பின், பத்திரிகையாளர்கள் சந்திப்பில், ஒரு தேசியவாதியாக, கலவரங்களுக்கு பின்னணியில் இருந்தவர்கள் நக்சல் பயங்கரவாதிகள், சமூக விரோதிகள்  என்று  பகிரங்கமாக கூறினார்.

தூத்துக்குடி சம்பவம் பற்றி ரஜினிகாந்த் கூறிய கருத்தை இந்து முன்னணி பேரியக்கம் வரவேற்று, பாராட்டுத் தெரிவித்தது.

ரஜினிகாந்த்தின் இந்தக் கருத்தினைப் பொறுத்துக்கொள்ள இயலாத தேசவிரோத சக்திகள், சமூக விரோத அமைப்புகள், நாளை வெளியாகும் அவருடைய திரைப் படத்தை வெளிவராமல் தடுப்பதற்கான பல்வேறு முயற்சிகளை செய்வதாக தெரிகிறது.

கர்நாடகத்தில் தன்னுடைய காலா படம் வெளிவர வேண்டும் என்பதற்காக ரஜினிகாந்த் கன்னடர்களிடத்திலே மண்டியிட்டுவிட்டார் எனப் பொய்ப் பிரச்சாரங்களை, விஷமத்தனமாக திரித்து வெளியிட்டு வருகிறார்கள்

தேசியவாதியான ரஜினிகாந்த் அவர்களுக்கு மிரட்டல் விடுத்திருப்பதுடன், அவருடைய திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட போவதாக அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது.

தமிழக காவல்துறை, ரஜினிகாந்த் அவர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும், அதேபோல நாளை திரைப்படம் வெளிவரக் கூடிய நிலையில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வண்ணம் திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தேவை ஏற்பட்டால் இந்து முன்னணி தொண்டர்கள் நாளை வெளிவரும் காலா திரைப்பட வெளியீட்டிற்கு தக்க பாதுகாப்பு அளிப்பார்கள் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம் .

தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் போராட்டம் என மக்களை நிம்மதியாக வியாபாரமோ, தொழிலோ, பிரயாணமோ செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தி வருகின்றனர்.

மக்களிடம் தவறான செய்திகளை கொண்டு சென்று பதட்டத்தை ஏற்படுத்தும், சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் சமூக விரோதிகளை, தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என இந்து முன்னணிக் கேட்டுக்கொள்கிறது.

1 COMMENT

  1. இந்த கும்பலை ஒடுக்காமல் ஒழித்து விடவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories