February 21, 2026, 4:43 PM
30.4 C
Chennai

கொட்டும் நீர்! குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் குளிக்க தடை!

courtallam jun14 - 2026

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துளதால், மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்ததால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்தொடங்கியது. இதனை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து குற்றால அருவிகளில் குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினர்.

இந்நிலையில் இன்று காலை முதலே குற்றாலம், தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

பாதுகாப்பு ஆர்ச் மீது தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதே போல் ஐந்தருவியிலும் தண்ணீர் வரத்து கூடியதால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க காவல் துறையினர் தடை விதித்தனர்.

இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தண்ணீர் குறைந்தவுடன் குளிக்க அனுமதி வழங்கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

1 COMMENT

  1. குளிக்கத்தடை மட்டும் கூடாது. தண்ணீர் வீணாவதைத் தடை செய்து சேமிக்க தக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும் . சிறு அணை கட்டி சேமிக்கவேண்டும்.
    தமிழ்நாட்டின் நதிகளின் தண்ணீர் மழைகால சேமிப்பின்றி வீணாகின்றன.
    அதனால் தான் விளை நிலங்கள் வீட்டுமனை விலை நிலங்களாக மாறுகின்றன.
    இது சுயநல அரசியல்வாதிகள். அதிகாரிகள் எதிர்கால பஞ்சத்திற்கு அஸ்திவாரம் போட்டு அழிபவர்கள். அரசியல் வாதிகள் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் ஆட்சியாளர்கள் காவலர்கள் நீதிபதிகள் இருக்கும்வரை நாடு வளம் பெறாமல் எதிர்காலத்தில் வறட்சிக்கு விதை விதை விதிப்பவர்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories