கொட்டும் நீர்! குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் குளிக்க தடை!

courtallam jun14 - 2026

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துளதால், மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்ததால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்தொடங்கியது. இதனை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து குற்றால அருவிகளில் குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினர்.

இந்நிலையில் இன்று காலை முதலே குற்றாலம், தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

பாதுகாப்பு ஆர்ச் மீது தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதே போல் ஐந்தருவியிலும் தண்ணீர் வரத்து கூடியதால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க காவல் துறையினர் தடை விதித்தனர்.

இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தண்ணீர் குறைந்தவுடன் குளிக்க அனுமதி வழங்கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

1 COMMENT

  1. குளிக்கத்தடை மட்டும் கூடாது. தண்ணீர் வீணாவதைத் தடை செய்து சேமிக்க தக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும் . சிறு அணை கட்டி சேமிக்கவேண்டும்.
    தமிழ்நாட்டின் நதிகளின் தண்ணீர் மழைகால சேமிப்பின்றி வீணாகின்றன.
    அதனால் தான் விளை நிலங்கள் வீட்டுமனை விலை நிலங்களாக மாறுகின்றன.
    இது சுயநல அரசியல்வாதிகள். அதிகாரிகள் எதிர்கால பஞ்சத்திற்கு அஸ்திவாரம் போட்டு அழிபவர்கள். அரசியல் வாதிகள் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் ஆட்சியாளர்கள் காவலர்கள் நீதிபதிகள் இருக்கும்வரை நாடு வளம் பெறாமல் எதிர்காலத்தில் வறட்சிக்கு விதை விதை விதிப்பவர்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories