இருசக்கர வாகனத்தில் இருவருமே ஹெல்மெட் அணிவது கட்டாயம்தான்!

HELMETS 1 - 2026

சென்னை: இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக இன்று ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பது சட்டம். இதைக் கடைபிடிக்காதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப் படுகிறது. இந்நிலையில் பயண பாதுகாப்பு குறித்து இன்று சென்னை உயர் நீதிமன்றம் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அவசியம் அணிய வேண்டும். அதன்படி இனி பின் இருக்கையில் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்.

அதுபோல், கார்களில் செல்லும் நான்கு பேரும் கட்டாயம் சீட் பெல்ட் போட்டுக் கொள்ள வேண்டும். வாகனங்களில் முகப்பு விளக்கின் நடுவில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருக்க வேண்டும்.

உயரதிகாரிகள், காவலர்களும் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இதுகுறித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க சென்னை டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை சரியாக நடைமுறைப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி வரும் 27ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்.

two sheeler helmet - 2026

முன்னதாக, பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் பெண்கள், அது தங்களுக்கு மிகவும் இடைஞ்சலாக இருப்பதாகவும், எனவே பின் இருக்கையில் அமர்ந்து செல்பவருக்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர். அதுபோல், மத ரீதியாக தலைப்பாகை, தொப்பி அணிந்து கொண்டு வாகனங்கள் ஓட்டுபவர்கள் பேரிலும் போலீஸார் நடவடிக்கை எதுவும் எடுத்ததில்லை. இனி உயர் நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டு உத்தரவுகளை போலீஸார் அவசியம் கடைப்பிடித்தே ஆகவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories