சாயம் வெளுத்த சகாயம் பின்னணி! பிளாஸ்டிக் ஒழிப்பு நோட்டீஸில் தஞ்சை கோவில் படம் போட்டு ‘சதி’!

sagayam plastic design withdrawn - 2026

சகாயம் ஐ.ஏ.எஸ்., – ஊடகங்களால் பெரிய ஆளாக வளர்க்கப்பட்டு வரும் இன்னொரு முகம்! அண்ணன் நல்லவரு, வல்லவரு ரேஞ்சுக்கு ஊடகங்கள் அவர் குறித்து வரும் செய்திகளால் இளைஞர்கள் ஒரு புறம் ஈர்க்கப் படுகிறார்கள் என்றால், இன்னொரு புறம் சமூக சேவை, அமைப்பு என்று குழு ரீதியாக இயங்கி அரசியலில் இறங்கும் அளவுக்கு பொதுமக்களிடம் முன்னிறுத்தப் படுகிறார் என்கிறார்கள் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள். சகாயத்தின் பின்னணியில் கிறிஸ்துவ மிஷனரிகளின் ஹிட்டன் அஜண்டா உள்ளது என்பது அவர்களின் குற்றச்சாட்டு.

இத்தகைய பின்னணியில், இந்தக் குற்றச்சாட்டை மெய்ப்பிப்பது போல், சகாயத்தால் இயக்கப்படும் மக்கள் பாதை அமைப்பின் அண்மைய நோட்டீஸ் ஒன்று உள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் பின்னணி குறித்து நெல்லை வாழ் வழக்குரைஞர் கா.குற்றாலநாதன் நம்மிடம் பகிர்ந்தவை…

பிளாஸ்டிக் ஒழிப்பாம்… நிச்சயமாக! ஒழிக்கப் பட வேண்டியது பிளாஸ்டிக்! ஆனால், ஒழிக்கப்பட வேண்டிய பிளாஸ்டிக் பொருட்களோடு தஞ்சை பெரிய கோவில் படத்தை அச்சிட்டு அதைக் குப்பையில் போடுவது ஏன்?
பிளாஸ்டிக் ஒழிப்பவர் – கிறிஸ்துவ சகாயம் ஐஏஎஸ் வகையறா.
இடம் – குழந்தை இயேசு கோவில் எதிரில்! – இந்தப் பின்னணிகளே சாயம் வெளுப்பதற்கான நிலையைக் காட்டுகிறது.

இப்படி எல்லாம் போட்டு, மதக் கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறதா சகாயம் குழு? மத மோதலைத் தூண்டும் சகாயம், மக்களுக்குப் பொதுவான IAS பதவிக்கு தகுதியான ஆள்தானா? நேற்று உமாசங்கர்; இன்று சகாயம் – எல்லாம் கிறிஸ்தவ ஏஜெண்டுகள்! என்றார்

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

மேலும், இது குறித்து அந்த அமைப்புடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டதாக அவர் கூறியுள்ளார். சகாயம் குழு தஞ்சை பெரிய கோவில் படத்தை நெகிழி குப்பைகளோடு போட்டு நெகிழியை ஒழிப்போம் என்று போட்டுள்ள விளம்பரம் குறித்து, அதில் குறிப்பிட்டிருந்த மூன்று எண்களில் பேசினேன்.

அதில் முதல் எண்ணில் 9384344881 பேசியவர், இது தொடர்பாக நான் பேசத் துவங்கியதும் “நான் பேருந்தில் இருக்கிறேன். பிறகு தொடர்பு கொள்கிறேன்” என அழைப்பை துண்டித்துவிட்டார். அதன் பின் ஒரு மணி நேரம் கழித்து தொடர்பு கொண்டால் இனைப்பில் வருகிறார். ஆனால் எதுவும் பேசாமல் மௌனம் காக்கிறார். சுற்றுப்புற சத்தம் மட்டுமே நமக்கு கேட்கிறது

மூன்றாவது எண்ணை (7871117214) தொடர்பு கொண்டோம் . அவர் பெயர் *யாசர்* என கூறினார். அவரிடம் நெகிழி குப்பைகளோடு ஏன் பெரிய கோவில் படத்தைப் போட்டீர்கள் என கேட்டதற்கு எதை எங்கு போட வேண்டும் என்பது எங்கள் விருப்பம் என ஆணவமாகக் கூறி மேற்கொண்டு பேசுவதற்குள் தான் அலுவலகத்தில் இருப்பதாகக் கூறி துண்டித்துவிட்டார்.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

sagayam plastic design - 2026

9994611156 நடுவில் உள்ள எண்ணில் கபில் என்பவர் பேசினார். அவர் இது பற்றிய செய்தி தனக்கு வந்ததாகவும் அதில் பெரிய கோவில் படத்தை நீக்க சொல்லியுள்ளதாகவும் கூறினார். நோட்டீஸில் எப்படி நீக்குவீர்கள் என்று கேட்டதற்கு, தான் அலுவலகத்தில் இருப்பதாகவும் மாலை அழைப்பதாகவும் கூறினார் … என்றார் கா.குற்றாலநாதன்.

இதன் பின்னர் இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. இதை அடுத்து, குறிப்பிட்ட எண்களுக்கு இன்னும் ஓரிருவர் போன் செய்து, ஏன் தஞ்சைப் பெரிய கோவில் படத்தை நெகிழிக் குப்பை எனும் சிம்பாலிக் படத்தின் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டதாகவும், சிலர் ஓங்கி உரத்த குரலில் கேட்க வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பதிவு செய்துள்ளனர்.

1 COMMENT

  1. தஞ்சை காவல் துறையினர் உண்மையை கண்டறிந்து இந்த செய்தியின் அடிப்படையில் உடனே நடவடிக்கை எடுத்து அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories