December 5, 2025, 2:56 PM
26.9 C
Chennai

20 ரூவா நோட்டு விவகாரம் அவ்வளவு லேசில முடியாது போல…! டிடிவி.,யை ரவுண்டு கட்டிய ஆர்.கே.நகர் தொகுதிவாசிகள்!

ttv dinakaran - 2025

சென்னை: ரூ.20 நோட்டில் எழுதிக் கொடுத்து, ஓட்டுகளை அட்வான்ஸ் புக்கிங் செய்த விவகாரத்தை அவ்வளவு எளிதில் விடமாட்டார்கள் போலுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏவான தினகரன், இன்று தொகுதிக்கு வர எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டம் நடத்தினர். அப்போது, தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்த கார்கள் மீது கல் வீசித் தாக்கினர்.

இந்தத் தாக்குத்லில் பெண் போலீஸ் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. தினகரனுக்கு ஆதரவாக சிலரும் கற்களை பதிலுக்கு வீசத் துவங்கினர். அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. போலீசார் குவிக்கப்பட்டனர்.

ஆர்.கே.நகர் தொகுதி மக்களை ரூ.20 கொடுத்து ஏமாற்றி விட்டதாக, சட்டமன்ற உறுப்பினரான டி.டி.வி.தினகரனை தொகுதிக்குள் நுழைய விடமாட்டோம் என சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தொகுதிக்கு வந்த டிடிவி கார் மீது கல் வீசித் தாக்கப்பட்டது. அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க கட்சியினர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதில் போலீசார் உள்ளிட்டோருக்கும் காயம் ஏற்பட்டது.

முன்னதாக, டிடிவி., ஆர்.கே.நகர் தொகுதி அலுவலகத்துக்கு வருவார் என்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி அலுவலகம் முன் தினகரன் ஆதரவாளர்களுடன் மதுசூதனன் ஆதரவு அதிமுக.,வினரும் அதிக அளவில் திரண்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதை அடுத்து இப்பகுதியில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், மதுசூதனன் ஆதரவாளர்கள் டிடிவி ஆதரவாளர்களின் கார் மீது கல் வீசித் தாக்கியதாகவும், பதிலுக்கு தினகரன் ஆதரவாளர்கள் கற்களை வீசியதாகவும் கூறப்படுகிறது.

இதில் இரு தரப்பைச் சேர்ந்த தொண்டர்களும் காயம் அடைந்தனர். எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேமாவுக்கும் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய டி.டி.வி.தினகரன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கல்வீச்சுக்கெல்லாம் அஞ்சப் போவதில்லை எனறு கூறினார். பின்னர் டி.டி.வி.தினகரனை காவல் துறையினர் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories