20 ரூவா நோட்டு விவகாரம் அவ்வளவு லேசில முடியாது போல…! டிடிவி.,யை ரவுண்டு கட்டிய ஆர்.கே.நகர் தொகுதிவாசிகள்!

ttv dinakaran - 2026

சென்னை: ரூ.20 நோட்டில் எழுதிக் கொடுத்து, ஓட்டுகளை அட்வான்ஸ் புக்கிங் செய்த விவகாரத்தை அவ்வளவு எளிதில் விடமாட்டார்கள் போலுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏவான தினகரன், இன்று தொகுதிக்கு வர எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டம் நடத்தினர். அப்போது, தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்த கார்கள் மீது கல் வீசித் தாக்கினர்.

இந்தத் தாக்குத்லில் பெண் போலீஸ் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. தினகரனுக்கு ஆதரவாக சிலரும் கற்களை பதிலுக்கு வீசத் துவங்கினர். அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. போலீசார் குவிக்கப்பட்டனர்.

ஆர்.கே.நகர் தொகுதி மக்களை ரூ.20 கொடுத்து ஏமாற்றி விட்டதாக, சட்டமன்ற உறுப்பினரான டி.டி.வி.தினகரனை தொகுதிக்குள் நுழைய விடமாட்டோம் என சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தொகுதிக்கு வந்த டிடிவி கார் மீது கல் வீசித் தாக்கப்பட்டது. அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க கட்சியினர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதில் போலீசார் உள்ளிட்டோருக்கும் காயம் ஏற்பட்டது.

முன்னதாக, டிடிவி., ஆர்.கே.நகர் தொகுதி அலுவலகத்துக்கு வருவார் என்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி அலுவலகம் முன் தினகரன் ஆதரவாளர்களுடன் மதுசூதனன் ஆதரவு அதிமுக.,வினரும் அதிக அளவில் திரண்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதை அடுத்து இப்பகுதியில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், மதுசூதனன் ஆதரவாளர்கள் டிடிவி ஆதரவாளர்களின் கார் மீது கல் வீசித் தாக்கியதாகவும், பதிலுக்கு தினகரன் ஆதரவாளர்கள் கற்களை வீசியதாகவும் கூறப்படுகிறது.

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

இதில் இரு தரப்பைச் சேர்ந்த தொண்டர்களும் காயம் அடைந்தனர். எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேமாவுக்கும் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய டி.டி.வி.தினகரன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கல்வீச்சுக்கெல்லாம் அஞ்சப் போவதில்லை எனறு கூறினார். பின்னர் டி.டி.வி.தினகரனை காவல் துறையினர் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories