20 ரூவா நோட்டு விவகாரம் அவ்வளவு லேசில முடியாது போல…! டிடிவி.,யை ரவுண்டு கட்டிய ஆர்.கே.நகர் தொகுதிவாசிகள்!

ttv dinakaran - 2026

சென்னை: ரூ.20 நோட்டில் எழுதிக் கொடுத்து, ஓட்டுகளை அட்வான்ஸ் புக்கிங் செய்த விவகாரத்தை அவ்வளவு எளிதில் விடமாட்டார்கள் போலுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏவான தினகரன், இன்று தொகுதிக்கு வர எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டம் நடத்தினர். அப்போது, தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்த கார்கள் மீது கல் வீசித் தாக்கினர்.

இந்தத் தாக்குத்லில் பெண் போலீஸ் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. தினகரனுக்கு ஆதரவாக சிலரும் கற்களை பதிலுக்கு வீசத் துவங்கினர். அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. போலீசார் குவிக்கப்பட்டனர்.

ஆர்.கே.நகர் தொகுதி மக்களை ரூ.20 கொடுத்து ஏமாற்றி விட்டதாக, சட்டமன்ற உறுப்பினரான டி.டி.வி.தினகரனை தொகுதிக்குள் நுழைய விடமாட்டோம் என சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தொகுதிக்கு வந்த டிடிவி கார் மீது கல் வீசித் தாக்கப்பட்டது. அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க கட்சியினர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதில் போலீசார் உள்ளிட்டோருக்கும் காயம் ஏற்பட்டது.

முன்னதாக, டிடிவி., ஆர்.கே.நகர் தொகுதி அலுவலகத்துக்கு வருவார் என்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி அலுவலகம் முன் தினகரன் ஆதரவாளர்களுடன் மதுசூதனன் ஆதரவு அதிமுக.,வினரும் அதிக அளவில் திரண்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதை அடுத்து இப்பகுதியில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், மதுசூதனன் ஆதரவாளர்கள் டிடிவி ஆதரவாளர்களின் கார் மீது கல் வீசித் தாக்கியதாகவும், பதிலுக்கு தினகரன் ஆதரவாளர்கள் கற்களை வீசியதாகவும் கூறப்படுகிறது.

இதில் இரு தரப்பைச் சேர்ந்த தொண்டர்களும் காயம் அடைந்தனர். எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேமாவுக்கும் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய டி.டி.வி.தினகரன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கல்வீச்சுக்கெல்லாம் அஞ்சப் போவதில்லை எனறு கூறினார். பின்னர் டி.டி.வி.தினகரனை காவல் துறையினர் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories