20 ரூவா நோட்டு விவகாரம் அவ்வளவு லேசில முடியாது போல…! டிடிவி.,யை ரவுண்டு கட்டிய ஆர்.கே.நகர் தொகுதிவாசிகள்!

ttv dinakaran - 2026

சென்னை: ரூ.20 நோட்டில் எழுதிக் கொடுத்து, ஓட்டுகளை அட்வான்ஸ் புக்கிங் செய்த விவகாரத்தை அவ்வளவு எளிதில் விடமாட்டார்கள் போலுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏவான தினகரன், இன்று தொகுதிக்கு வர எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டம் நடத்தினர். அப்போது, தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்த கார்கள் மீது கல் வீசித் தாக்கினர்.

இந்தத் தாக்குத்லில் பெண் போலீஸ் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. தினகரனுக்கு ஆதரவாக சிலரும் கற்களை பதிலுக்கு வீசத் துவங்கினர். அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. போலீசார் குவிக்கப்பட்டனர்.

ஆர்.கே.நகர் தொகுதி மக்களை ரூ.20 கொடுத்து ஏமாற்றி விட்டதாக, சட்டமன்ற உறுப்பினரான டி.டி.வி.தினகரனை தொகுதிக்குள் நுழைய விடமாட்டோம் என சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தொகுதிக்கு வந்த டிடிவி கார் மீது கல் வீசித் தாக்கப்பட்டது. அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க கட்சியினர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதில் போலீசார் உள்ளிட்டோருக்கும் காயம் ஏற்பட்டது.

முன்னதாக, டிடிவி., ஆர்.கே.நகர் தொகுதி அலுவலகத்துக்கு வருவார் என்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி அலுவலகம் முன் தினகரன் ஆதரவாளர்களுடன் மதுசூதனன் ஆதரவு அதிமுக.,வினரும் அதிக அளவில் திரண்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதை அடுத்து இப்பகுதியில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், மதுசூதனன் ஆதரவாளர்கள் டிடிவி ஆதரவாளர்களின் கார் மீது கல் வீசித் தாக்கியதாகவும், பதிலுக்கு தினகரன் ஆதரவாளர்கள் கற்களை வீசியதாகவும் கூறப்படுகிறது.

இதில் இரு தரப்பைச் சேர்ந்த தொண்டர்களும் காயம் அடைந்தனர். எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேமாவுக்கும் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய டி.டி.வி.தினகரன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கல்வீச்சுக்கெல்லாம் அஞ்சப் போவதில்லை எனறு கூறினார். பின்னர் டி.டி.வி.தினகரனை காவல் துறையினர் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories