விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கான சேர்க்கை விண்ணப்பம் செவ்வாய்க்கிழமை இன்று முதல் வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் 2015-16-ம் கல்வி ஆண்டுக்குரிய பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம், பி.பி.ஏ உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே 5-ம் தேதி முதல் கல்லூரி வேலை நாள்களில் காலை 10 மணியிலிருந்து வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் 27 ரூபாய். எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் ஜாதிச் சான்றிதழின் உண்மை நகலை எடுத்து வந்து காண்பித்து, சான்றிதழின் நகலைக் கொடுத்து விண்ணப்பத்தை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒப்படைக்க மே 18-ம் தேதி இறுதி நாள். மாணவர் கலந்தாய்வு மே 21 தொடங்கி, மே 26-ம் தேதியுடன் முடிவடையும். இதனையடுத்து ஜூன் 2-ம் தேதி முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும்.
விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்பம் வழங்கல்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

