கருணா…நிதி…! குடும்பத்தினர், அரசியல்வாதிகள் என பலரும் வீட்டில் குவிவதைப் பார்த்தால்..?!

stalin in gopalapuram - 2026

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்கு அரசியல்வாதிகள், குடும்ப உறுப்பினர்கள் என பலரும் குவிந்து வருவதைப் பார்த்தால், அவரது உடல் நிலை குறித்து பரவிய வதந்தி உண்மையாக இருக்குமோ என்று பலருக்கும் எண்ணத் தோன்றியிருக்கிறது.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக., தலைவருமான கருணாநிதியின் உடல் நலம் குறித்து பரவலாக செய்தீகள் உலவின. ஆனால் அவை வதந்தி என்று கூறி அவற்றுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் மு.க.ஸ்டாலின். இதனிடையே, எதையும் தாங்கும் இதயம் என்றும், என் இதயத்தில் இடம் இருக்கிறது என்றும் அடிக்கடி கூறி வந்த கருணாநிதிக்கு, இதயம் மட்டுமே சரியாக இயங்குவதாகவும், மற்ற உடல் உறுப்புகள் செயல் இழந்து விட்டன, மல்டி ஆர்கன் ஃபெய்லியர் என்றும் கூறி சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலவின.

ஆனால் அவரது உடல் நலம் குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அவரைக் காண யாரும் அணி திரண்டு வரவேண்டாம் என்றும், சிறு நீர்த் தொற்று காரணமாக ஏற்பட்ட காய்ச்சல் என்றும் அது குணமாகிவிடும் என்றும், அவருக்கு வீட்டிலேயே 24 மணி நேரமும் உயர் ரக சிகிச்சை, மருத்துவமனையைப் போலவே மேற்கொள்ளப் படுவதாகவும் கூறியிருந்தது.

ஆயினும், கருணாநிதி மீது பாசம் வைத்த தொண்டர்கள் பலர் அவரது வீடு நோக்கி படை எடுக்கத் தொடங்கினர். வியாழக்கிழமை இரவு அவரது கோபாலபுரம் வீட்டின் முன் தொண்டர்கள் பலர் குவிந்து வருகின்றனர்.

gopalapuram house - 2026

இதனிடையே வெளியிடங்களுக்கு பணி நிமித்தமாக சென்றுள்ள காவலர்களை சென்னைக்குத் திரும்புமாறு காவல் துறையில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், கருணாநிதியின் வீட்டுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், குடும்ப உறுப்பினர்கள் பலரும் ஓடி வருகின்றனர். இதனால் பொதுமக்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது.

தி.மு.க தலைவர் கலைஞர் உடல் நலம் குறித்து நலம் விசாரிக்க தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் கோபாலபுரம் வந்திருந்தார். நடிகர் கமலஹாசனும் கருப்புச் சட்டையுடன் அங்கே வந்திருந்தார். எனவே இந்த கருப்புச் சட்டையுடன் கூடிய புகைப்படத்தைக் கண்ட பலருக்கும் எண்ணம் வித்தியாசமாகச் சென்றது. இதை உணர்ந்தோ என்னவோ, வெளியில் வந்த ஜி.கே.வாசன், கருணாநிதி நலமுடன் எழுந்து வருவார் என்று கூறி விட்டுச் சென்றார்.

gopalapuram house2 - 2026

இதனிடையே, கருணாநிதிக்கு மிகவும் பாசம் மிக்க மகளான கனிமொழி, வெள்ளி அன்று காலை 5.30 மணியளவில் சென்னைக்கு வந்து சேர்வார் என்று கூறப் படுகிறது. மேலும், மதுரையில் இருந்து கருணாநிதியின் இன்னொரு மகனான மு.க.அழகிரி சென்னைக்கு சாலை மார்க்கமாகவே பயணம் மேற்கொண்டுள்ளார்.

கருணாநிதியின் வீட்டில், மு.க.ஸ்டாலின், துரை.முருகன், கமலஹாசன் ஆகியோர் சோகமே வடிவாக அமர்ந்திருந்தனர்.

இத்தகைய செய்திகளால் கோபாலபுரத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories