கருணா…நிதி…! குடும்பத்தினர், அரசியல்வாதிகள் என பலரும் வீட்டில் குவிவதைப் பார்த்தால்..?!

stalin in gopalapuram - 2026

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்கு அரசியல்வாதிகள், குடும்ப உறுப்பினர்கள் என பலரும் குவிந்து வருவதைப் பார்த்தால், அவரது உடல் நிலை குறித்து பரவிய வதந்தி உண்மையாக இருக்குமோ என்று பலருக்கும் எண்ணத் தோன்றியிருக்கிறது.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக., தலைவருமான கருணாநிதியின் உடல் நலம் குறித்து பரவலாக செய்தீகள் உலவின. ஆனால் அவை வதந்தி என்று கூறி அவற்றுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் மு.க.ஸ்டாலின். இதனிடையே, எதையும் தாங்கும் இதயம் என்றும், என் இதயத்தில் இடம் இருக்கிறது என்றும் அடிக்கடி கூறி வந்த கருணாநிதிக்கு, இதயம் மட்டுமே சரியாக இயங்குவதாகவும், மற்ற உடல் உறுப்புகள் செயல் இழந்து விட்டன, மல்டி ஆர்கன் ஃபெய்லியர் என்றும் கூறி சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலவின.

ஆனால் அவரது உடல் நலம் குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அவரைக் காண யாரும் அணி திரண்டு வரவேண்டாம் என்றும், சிறு நீர்த் தொற்று காரணமாக ஏற்பட்ட காய்ச்சல் என்றும் அது குணமாகிவிடும் என்றும், அவருக்கு வீட்டிலேயே 24 மணி நேரமும் உயர் ரக சிகிச்சை, மருத்துவமனையைப் போலவே மேற்கொள்ளப் படுவதாகவும் கூறியிருந்தது.

ஆயினும், கருணாநிதி மீது பாசம் வைத்த தொண்டர்கள் பலர் அவரது வீடு நோக்கி படை எடுக்கத் தொடங்கினர். வியாழக்கிழமை இரவு அவரது கோபாலபுரம் வீட்டின் முன் தொண்டர்கள் பலர் குவிந்து வருகின்றனர்.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

gopalapuram house - 2026

இதனிடையே வெளியிடங்களுக்கு பணி நிமித்தமாக சென்றுள்ள காவலர்களை சென்னைக்குத் திரும்புமாறு காவல் துறையில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், கருணாநிதியின் வீட்டுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், குடும்ப உறுப்பினர்கள் பலரும் ஓடி வருகின்றனர். இதனால் பொதுமக்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது.

தி.மு.க தலைவர் கலைஞர் உடல் நலம் குறித்து நலம் விசாரிக்க தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் கோபாலபுரம் வந்திருந்தார். நடிகர் கமலஹாசனும் கருப்புச் சட்டையுடன் அங்கே வந்திருந்தார். எனவே இந்த கருப்புச் சட்டையுடன் கூடிய புகைப்படத்தைக் கண்ட பலருக்கும் எண்ணம் வித்தியாசமாகச் சென்றது. இதை உணர்ந்தோ என்னவோ, வெளியில் வந்த ஜி.கே.வாசன், கருணாநிதி நலமுடன் எழுந்து வருவார் என்று கூறி விட்டுச் சென்றார்.

gopalapuram house2 - 2026

இதனிடையே, கருணாநிதிக்கு மிகவும் பாசம் மிக்க மகளான கனிமொழி, வெள்ளி அன்று காலை 5.30 மணியளவில் சென்னைக்கு வந்து சேர்வார் என்று கூறப் படுகிறது. மேலும், மதுரையில் இருந்து கருணாநிதியின் இன்னொரு மகனான மு.க.அழகிரி சென்னைக்கு சாலை மார்க்கமாகவே பயணம் மேற்கொண்டுள்ளார்.

ALSO READ:  முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

கருணாநிதியின் வீட்டில், மு.க.ஸ்டாலின், துரை.முருகன், கமலஹாசன் ஆகியோர் சோகமே வடிவாக அமர்ந்திருந்தனர்.

இத்தகைய செய்திகளால் கோபாலபுரத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories