எடப்பாடி வந்த பிறகுதான் மத்ததெல்லாம்…!

Published:

edappadi pazanisamy - 2026

சென்னை: தமிழக முதலமைச்சா் எடப்பாடி பழனிச்சாமி இரவு 12.30மணி விமானத்தில் கோவையிலிருந்து சென்னை வருகிறாா்.

நாளை காலை 11.15 விமானத்தில்தான் கோவையிலிருந்து சென்னை வருவதாக இருந்தது. ஆனால், தற்போது அவசரமாக முன்னதாகவே வருகிறாா்.

நள்ளிரவு 1 மணியளவில் காவேரி மருத்துவமனைக்கு வருகிறார் தமிழக முதலமைச்சர் பழனிசாமி. முதல்வர் இரவு ஒருமணிக்கு மருத்துவமனை வர உள்ளதால் அதுவரை அறிவிப்பு ஏதும் வர வாய்ப்பு குறைவு என தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், எதற்காக அவ்வளவு அவசரமாக எடப்பாடி பழனிசாமி அரசு விழாவை எல்லாம் ரத்து செய்துவிட்டு காவேரி மருத்துவமனைக்கு வர வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கருணாநிதி உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, உடல் நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தொண்டர்கள் சற்று உற்சாகமாக இருந்தனர். ஆனால், வெளியுலக சுற்றுப் புறச் சூழலும், காவலர்கள் கெடுபிடியும், எடப்பாடி அவசர ஊர் திரும்பலும் தொண்டர்களைக் கலக்கமடைய வைத்துள்ளது.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img