காவேரி மருத்துவமனையில் தடியடி: கோபாலபுரம் நோக்கி படையெடுத்த தொண்டர்கள்!

Published:

dmk caders gopalapuram - 2026

சென்னை: உடல் நலமின்றி காவேரி  மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வரும் கருணாநிதியின் உடல் நலம் குறித்த தகவல்களால் கவலை அடைந்த தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன் குவிந்தனர்.

தொண்டர்கள் கலைந்து செல்லுமாறு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா வேண்டுகோள் விடுத்தார். ஆனால்,  தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு இருந்து கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், கூட்டத்தைக் கட்டுப் படுத்தவும், அந்த இடத்தைத் தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும் காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைந்து போகச் செய்தனர். இன்று நள்ளிரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருவதால் கூட்டத்தை உடனே கலைக்க வேண்டிய கட்டாயச் சூழல் போலீஸாருக்கு எழுந்தது.

இந்நிலையில், அங்கிருந்து கலைந்து சென்ற தொண்டர்கள் கோபாலபுரம் நோக்கி கூட்டம் கூட்டமாகப் டையெடுத்தனர். இதனால் கோபாலபுரம் செல்லும் சாலைகள் நிரம்பி வழிந்தன.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img