மீண்டும் காவேரிக்கு வந்த கனிமொழி, ராசாத்தி அம்மாள்!

Published:

karunanidhi kauvery hospital - 2026

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு கனிமொழி, பொன்முடி ஆகியோர் மீண்டும் வந்தனர்.

இரவு 10 மணிக்கு மேல் காவேரி மருத்துவமனையை விட்டு வெளியேறிய கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள், மீண்டும் மருத்துவமனைக்கு இரவு 11.30க்கு மேல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காவேரி மருத்துவமனைக்கு ராசாத்தி அம்மாள், கனிமொழி ஆகியோர் மீண்டும் இரவு 11.30 மணி அளவில் வந்தனர்.

நாஞ்சில் சம்பத் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். காவேரிக் கரையில் பிறந்த கலைஞர் காவேரி மருத்துவமனையில் காலனோடு போராடுகிறார்.. என்று உருக்கத்துடன் கூறினார் நாஞ்சில் சம்பத்.

தொடர்ந்து காவிரி மருத்துவமனைக்கு திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி வந்தார்.

#Karunanidhi #DMK

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img