காவேரி மருத்துவமனைக்கு வருகிறார் மோடி! பாதுகாப்பு தீவிரம்!

Published:

karunanidhikauvery - 2026

சென்னை: உடல் நலம் குன்றி சென்னை ஆழ்வார் பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக., தலைவர் கருணாநிதி உடல் நலம் விசாரிப்பதற்காக,  நாளை பிரதமர் மோடி காவேரி மருத்துவமணைக்கு வரவுள்ளதாக தகவல் பரவியது. இதை அடுத்து, மருத்துவமனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் காவேரி மருத்துவமனை  கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னதாக இன்று காவல் துறை ஆணையர் தலைமையில் காவல் துறையினர் கூட்டம் நடைபெற்றது.

இன்று மாலை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வந்து பார்வையிட்டுச் சென்றார். நேற்று நாட்டின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வந்து ஸ்டாலினிடம் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்துச் சென்றார்.

இந்நிலையில் இன்று கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டு, அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரம் கழித்தே எதுவும் சொல்ல முடியும் என்றும் மருத்துவர்கள் கைவிரித்தனர். இதை அடுத்து, நாளை பிரதமர் மோடி வருகை தரவுள்ளதாக செய்தி பரவியது.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img