திருச்சி விமான நிலையத்தில் 3வது நாளாக ‘சுங்க’ அதிகாரிகளிடம் ‘தங்க’ சோதனை!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

Trichy airport Gold smuggling police inquiry - 2026

திருச்சி:  விமான நிலையத்தில் 3-வது நாளாக சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்கக் கடத்தல்காரர்களுக்கு உதவியதாக சுங்க அதிகாரிகள் உள்பட 19 பேர் நேற்று கைது செய்யப் பட்டுள்ளனர்.

19 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் சிபிஐ அதிகாரிகள் சோதனையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். விமான நிலையத்தில் மேலும் 3 பயணிகளிடம் சி.பி.ஐ அதிகாரிகளின்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மலேசியாவில் இருந்து நேற்று திருச்சி வந்த 3 பயணிகளிடம் இன்று மீண்டும் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.

முன்னதாக, நேற்று  விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் 4 பேர் உள்பட 19 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் சிபிஐ அதிகாரிகள். 

விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் தொடர்பாக சுங்கத்துறை உதவி ஆணையர் வெங்கடேசலு, கண்காணிப்பாளர்கள் ராமகிருஷ்ணன், மூர்த்தி, எட்வர்ட், அனீஸ்பாத்திமா, சுங்கத்துறை ஆய்வாளர் பிரசாந்த் உள்ளிட்ட அதிகாரிகள் கைது செய்யப் பட்டனர். 

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Related articles

Recent articles

spot_img