மெரினாவில் இடமில்லை! அமைச்சர்களின் ஒட்டுமொத்தக் கருத்து?!

idhaya anjali 1 - 2026
சென்னை: காவேரி மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் திமுக,. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை அபாயக் கட்டத்தில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஏதாவது வருந்தத் தக்க செய்தி வருமானால் அடுத்து மேற்கொள்ள வேண்டியவை குறித்து குடும்பத்தினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக் கிடமாக உள்ள நிலையில் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். மு.க.அழகிரி, கனிமொழி, முரசொலி செல்வம், டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி ஆகியோரும் ஸ்டாலினுடன் சென்றிருந்தனர்.

இதனால், அடுத்து நடைபெற வேண்டிய ஏற்பாடுகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், கருணாநிதி குறித்த அடுத்த கட்ட அறிக்கையை இன்று மாலை 6 அளவில் வெளியிடுவதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனால் இருவேறு குழப்ப நிலையில், அடுத்து மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்து தீவிர ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

அப்போது கருணாநிதி உடல் நிலை குறித்து ஒருவேளை விரும்பத்தகாத செய்தி வந்தால் மெரினாவில் ஏற்பாடு செய்யவேண்டும் என்று திமுக.,வினர் பேசியுள்ளனர். ஆனால், மெரினாவில் இடம் கொடுக்கக் கூடாது என்பதே அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினரின் ஒருமித்த கருத்தாக உள்ளதாம்!

இதனிடையே சமூக வலைத்தளங்களில் பரவலாக பல்வேறு கருத்துகள் உலாவருகின்றன. முன்னர் காமராஜர் காலமான போது பதவியில் இல்லாத முன்னாள் முதல்வருக்கெல்லாம் மெரினாவில் இடம் இல்லை என்று முதல்வராக இருந்த கருணாநிதிதான் கூறினார் என்று சுட்டிக் காட்டுகின்றனர்.

இது குறித்த விவாதங்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் சூடுபிடித்துள்ளது.

 

1 COMMENT

  1. காமராஜர் காலமானபோது, முன்னாள் முதல்வருக்கெல்லாம் மெரினாவில் இடமில்லை என்று இந்த முன்னாள் முதல்வர் கூறினார், இவர் அப்போது சொன்னது தி.மு.க. வை ஆளும் குடும்பத்தாருக்கு தெரியாமல் போனதே, ஏன் ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories