கண்ணீர் விட்டுக் கதறும் தொண்டர்கள்; உணர்ச்சி வெள்ளத்தில் காவேரீ..!

Published:

dmk caders2 vert - 2026

சென்னை: திமுக., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மிக மோசம் அடைந்துவிட்டதாகவும், மருத்துவ கண்காணிப்பில் உடல் இயங்குவதாகவும், வயதின் தன்மை காரணத்தால் உடல் உறுப்புகள் செயல்பட மறுப்பதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இதை அடுத்து, காவேரி மருத்துவமனை முன்பு குவிந்துள்ள தி.மு.க தொண்டர்கள் பெரிதும் சோகம் அடைந்தனர். மருத்துவமனை முன்பு குவிந்துள்ள தொண்டர்களில் சிலர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

நேற்று எழுந்து வா தலைவா என்று கோஷமிட்டு, பாடல்களைப் பாடி உற்சாகப் படுத்திய தொண்டர்கள், இன்று மருத்துவமனை அறிக்கையையும், திமுக., தலைவர்களின் அவசர செயல்பாடுகளையும் நடமாட்டத்தையும் கண்டு பெரிதும் சோகம் அடைந்தனர். குறிப்பாக, துரை முருகன் அழுது கொண்டே மருத்துவமனைக்குள் சென்றது அவர்களுக்குள் மேலும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே கருணாநிதி மகள் செல்வி கதறிக் கொண்டே கோபாலபுரம் இல்லத்துக்குள் செல்வதையும் பார்த்து தொண்டர்களும் கதறி அழத் தொடங்கினர். திமுக., பெண்கள் சிலர் உணர்ச்சி வேகத்தில் பெருங்குரல் எடுத்து கதறினர்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

police force - 2026

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காவேரி மருத்துவமனை முன்பாக அனைவரும் பலமாக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். அவர்களில் பலர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img