மெரினாவில் அடக்கம் செய்யப்படும் ‘வாரிசுகளுள்ள’ முதல் முன்னாள் முதல்வர்!

Published:

IMG 20180808 WA0062 - 2026

சென்னை: இதுவரை மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் நேரடி வாரிசுகள் யாரும் தமிழகத்தை ஆண்டதில்லை! அப்படி ஒரு ராசியாமே?? நல்லது நடந்தால் சரி! – இப்படி சில கருத்துகள் சமூக வலைத்தளங்களை நிரப்பி வருகின்றன.

அதாவது மு.க.ஸ்டாலின் அடுத்து முதல்வர் கனவில் இருக்கும் நிலையில், ஸ்டாலின் முதல்வராக வர வாய்ப்பில்லை என்பதைச் சொல்லும் விதமாக இப்படி ஒரு கருத்தை செண்டிமெண்ட்டாக வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்டவற்றி பரப்பி வருகின்றனர்.

ஆகவேதான்,  ஸ்டாலின் இதுவரையில் அவரை அப்பா என்று கூப்பிடவில்லையாம் …. தலைவர் தலைவரே என்றே கூப்பிட்டுள்ளாராம் என்று, ஸ்டாலின் நேற்று வெளியிட்ட கவிதையை மேற்கோள் காட்டி சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் உண்மையில், மெரினாவில் சமாதி கொண்ட அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என மூவருக்குமே நேரடி வாரிசுகள் இல்லை என்பதும், இப்போது கருணாநிதிதான் வாரிசுகளுள்ள அரசியல் தலைவராக, முன்னாள் முதல்வராக மெரீனாவில் சமாதியாகப் போகிறார் என்றும் வேறு சிலர் பதிலளித்து வருகின்றனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img